மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்...!

கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் மதுரையில் நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!! 

Last Updated : Jun 22, 2020, 05:44 PM IST
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்...!  title=

கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் மதுரையில் நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!! 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில்,   சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை  (19 ஆம் தேதி) முதல் வருகிற 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது.

இந்நிலையில், மதுரையில் நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றத்தில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு. இந்நிலையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30 ஆம் தேதி  டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

READ | COVID-19 சிக்கிசைக்கான மருந்தை அறிமுகப்படுத்திய சிப்லா - முழு விவரம்! 

இது குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... 

  1. மருத்துவமனைகள், மருந்து ஆய்வகங்கள், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மட்டும் செயல்படும்.
  2. ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை. அதே நேரத்தில், ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் செல்லலாம். ரயில்வே மற்றும் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை அழைத்து செல்லும் ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி உண்டு. அதில் பயணிப்பவர்கள் இ-பாஸ் பெற வேண்டும்.
  3. மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் மட்டும் செயல்படும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, போலீஸ் வருவாய் மற்றும் பேரிடர் துறை, மின்சாரம், கருவூலத்துறை ஆவின், உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, உணவு நகர்வோர் துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தேவைக்கு ஏற்ப செயல்படுவார்க்ள. 
  4. மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு வர தேவையில்லை. அதற்கு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  5. வங்கிகள் 33 சதவீத ஊழியர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏடிஎம், வங்கி சார்ந்த சேவைகள் மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் இயங்க அனுமதியுண்டு.
  6. பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் செயல்படாது. அங்கு வீடுகளுக்கே வந்து பொருட்கள் வழங்கப்படும்.
  7. காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், பெட்ரோல் பங்குகள், கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி உண்டு. நடமாடும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம். மக்கள் வீடுகளில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவிற்குள் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டும்.
  8. ஓட்டல்களில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை பார்சல் உணவுக்கு மட்டும் அனுமதி உண்டு. தேநீர் கடைகளுக்கு அனுமதியில்லை. மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் செயல்பட அனுமதி உண்டு.
  9. வரும் 28 ஆம் தேதி எந்தவித தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்படும். அம்மா உணவகங்கள், சமுதாய கூடங்கள் செயல்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Trending News