இராமேஸ்வரம் முதல் ராஷ்டிரபதி பவன் வரை!!

Last Updated : Jul 27, 2017, 11:14 AM IST
இராமேஸ்வரம் முதல் ராஷ்டிரபதி பவன் வரை!! title=

ஏவுகணை நாயகன், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சி தந்தை, தலைசிறந்த விஞ்ஞானி சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர் என நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார்.

இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது தொடக்க கல்வியினை தொடங்கிய அப்துல் காலம் , தன் குடும்பம்த்தின் ஏழ்மை நிலையினை கருதி இளம் வயதிலே தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்து வந்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, 1954ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை இவருக்கு, ஆகையால் 1955ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னை எம்.ஐ.டி-யில் தொடங்கி பின் அதே கல்லூரியில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.

அப்துல் கலாம் - விஞ்ஞானியாக:      

விமானியாக ஆகா வேண்டும் என்பதே கலாமின் கனவாக இருந்தது, அவ்வாசை நிறைவேறாமல் போனதால் அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) 1960 ஆம் ஆண்டு வானூர்தி  விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினர், சிறிய ஹெலிகாப்டரை ஒன்றை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் ஆரம்பித்தார், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இச்செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் 1963 ஆம் ஆண்டு தொடங்கி 1983 ஆம் ஆண்டு வரை பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றினார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். 

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக  பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் கொண்டவர். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று விலகினார்.

கடந்த 2015 ஜூலை 27ஆம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்த போது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மரணமடைந்தார். 

கலாம் பெற்ற விருதுகள்:

1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 –  சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

உலகம் போற்றும் மாமனிதராக கலாம் தற்போதும் அனைவரது உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பது யாராலும் மறுக்க இயலாது.

Trending News