EPS-க்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு! நீதிபதி உத்தரவு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதி ரமணா உத்தரவிட்டிருக்கிறார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 26, 2022, 12:59 PM IST
  • எடப்பாடி பழனிசாமி மீது டெண்டர் முறைகேடு வழக்கு.
  • ஆர்.எஸ்.பாரதி 2018-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
  • ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதி உத்தரவு.
EPS-க்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு! நீதிபதி உத்தரவு! title=

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராகப் பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என வழக்கு தொடர்ந்தார்.  ஆர்.எஸ்.பாரதியின் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. 

Eps

மேலும் படிக்க | அதிமுக அலுவலகத்தை சூறையாடியது ஓபிஎஸ் அல்ல - பரபரப்பு கிளப்பும் அதிமுக எம்.பி.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இவ்வழக்கு இப்போது வரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  இந்நிலையில் ரூ4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு தொடர்பான இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்; இவ்வழக்கு விசாரிக்கப்படாமல் இருப்பதால் விசாரணைகளும் முடங்கி உள்ளதாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா பெஞ்ச் முன்பு ஆஜராகி இதனை சுட்டிக்காட்டினர். 

Supreme Court

இதனையடுத்து இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் முன்பாக எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு இன்று 15-வது வழக்காக விசாரணைக்கு வந்தது.  இதில் ஆஜரான ஆர்எஸ் பாரதி தரப்பு வழக்கறிஞர் தான் தற்போது அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளதால் எனக்கு பதிலாக மற்றொரு வழக்கறிஞரை இந்த வழக்கில் ஆஜராக அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார், இதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்.  அதே வேளையில் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு தனக்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் முறையிடப்பட்டதாகவும் வழக்கு தொடர்பாக கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரமணா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | பாலியல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை. பொறுப்பு பதிவாளர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News