அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு; டெல்லியில் பரபரப்பு பேட்டி

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து பேசினார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 20, 2022, 12:59 PM IST
  • உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பு
  • எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி
அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு; டெல்லியில் பரபரப்பு பேட்டி title=

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். ஓபிஎஸ் உடன் மோதல் தொடரும் நிலையில் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து ஈபிஎஸ் விவாதித்தகக தகவல் அளித்துள்ளனர். அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்துள்ளது.

உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது: எடப்பாடி பழனிச்சாமி பேட்டியின் முழு விவரம்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம்: நக்கீரன் நிருபர்-புகைப்படக் கலைஞர் மீது சமூக விரோதிகள் தாக்குதல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அரசியல் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசவில்லை. பிரதமரை சந்திக்கும் திட்டம் இந்த நிமிடம் வரை இல்லை எனக்கு. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளதையும் கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பதையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். 

மேலும் படிக்க | காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தங்கப்பாண்டி மரணத்திற்கு நீதி வேண்டும்: சீமான்

அதேபோல் கோதாவரி மற்றும் காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது பற்றி அமித்ஷாவிடம் கூறினேன் என்று ஈபிஎஸ் கூறியுள்ளார். அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

முன்னதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட சிறுவர்கள்.. தின்பண்டம் அனுப்பி பாசத்தை பொழிந்த 'மதுரைக்காரர்கள்'

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News