திமுக தலைவர் கருணாநிதி குணம் அடைந்து வருகிறார்

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்ட தால் நேற்று காவேரி ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Last Updated : Dec 2, 2016, 01:53 PM IST
திமுக தலைவர் கருணாநிதி குணம் அடைந்து வருகிறார் title=

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்ட தால் நேற்று காவேரி ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு கண்டு பிடிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர் அளித்து வரும் சிகிச்சையில் கருணாநிதி குணம் அடைந்து வருகிறார்.

மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனி மொழி எம்.பி., மற்றும் குடும்பத்தினர் கருணா நிதியை அருகிலிருந்து கவனித்து வருகிறார்கள்.

கருணாநிதியின் உடல் நிலையை குருட்டு பல அரசியல் தலைவர்கள் விசாரித்தனர். 

ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக சிகிச்சை பெறும் கருணாநிதியின் உடல்நலம் நன்றாக உள்ளதாக கனி மொழி தெரிவித்தார். மேலும் அவர் நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News