தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!!

Last Updated : Oct 29, 2016, 02:29 PM IST
தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!! title=

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் தீப ஒளி திருநாளான இன்று பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தும், கோவில்களில் தீபம் ஏற்றியும் சுவாமியை வழிப்பட்டனர். வாழ்வில் இருள் நீங்கி வளமான வாழ்வு அமைய வேண்டி உற்றார் உறவினர்களுடன் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

இந்தியாவின் வெளி மாநிலங்களிலும் மற்றும் வெளி நாட்டிலும் வாழும் தமிழர்கள் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாடினார்கள்.

Trending News