அவதூறு வழக்கு: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்

Last Updated : Aug 10, 2016, 01:33 PM IST
அவதூறு வழக்கு: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரன்ட் title=

அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக, அரசு வழக்கறிஞர் குலோத்துங்கன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பல முறை விஜயகாந்த் நேரில் ஆஜராகாத காரணத்தினால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமா பானு உத்தரவிட்டார். 

இதேபோல், கடந்த மாதம் முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்துக்கும், அவரது மனைவி பிரேமலதாவுக்கும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப் பட்டது இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து பிடிவாரன்ட்க்கு தடையணை வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News