கோவையில் அரங்கேறிய கோர விபத்து..! ராட்சத பேனர் விழுந்து 3 பேர் பலி

கோயம்பத்தூர், கருமத்தம்பட்டி அருகே காற்றுடன் பெய்த மழையில் ராட்சத பேனர் சரிந்ததில் 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 2, 2023, 06:45 AM IST
  • கோவை ராட்ச பேனர் விழுந்து விபத்து
  • 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
  • காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை
 கோவையில் அரங்கேறிய கோர விபத்து..! ராட்சத பேனர் விழுந்து 3 பேர் பலி title=

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ராமசாமி என்பவரது இடத்தில் ராட்சத பேனர்கள் வைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை சேலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தலைமையில், 7 தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர். அவர்கள், அங்கு ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த விளம்பரத்தை அகற்றிவிட்டு, புதிய விளம்பர பேனரை பொருத்திக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதுடன், மிதமான மழையும் பெய்து வந்தது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், விளம்பர பேனர் பொருத்தவிருந்த இரும்பு சாரம் திடீரென சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

மேலும் படிக்க |  மேகதாது விவகாரம்: 'கண்டனம் வரவில்லை... உரிமைகளை விட்டுக்கொடுக்கும் ஸ்டாலின்' - அண்ணாமலை

இதில், பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் சாரத்தின் அடியில் சிக்கினர். இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்கள், கருமத்தம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பொதுமக்களுடன் இணைந்து, சாரத்தை அப்புறப்படுத்தி அடியில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டனர். சாரம் விழுந்து அழுத்தியதால் குமார், குணசேகரன், சேகர் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஒப்பந்ததாரர் பழனிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக உயரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க | கல்யாண தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில்... விருந்தாளிகளை குஷிப்படுத்திய மணமகன் வீட்டார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News