Paying guest ஐ பூரிக்கட்டையால் அடித்த பாஜக பிரமுகர் கைது

பவன்குமார் பூஜாவின் மேலாடைகளை கிழித்து அவரை கைகளால் சரமரியாக தாக்கியுள்ளார். அதே நேரத்தில் அந்தப் பெண்ணுடன் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 27, 2022, 11:34 AM IST
Paying guest ஐ பூரிக்கட்டையால் அடித்த பாஜக பிரமுகர் கைது title=

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பூஜா நட்வர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மும்பையை சேர்ந்தவராவார். பூஜா நட்வர் சென்னை, நங்கநல்லூர், பி.வி.நகரில் பவன்குமார் என்பவரது வீட்டின் 2வது மாடியில் வசித்து வந்துள்ளார். இவர் பவன்குமாரின் சகோதரியுடன் பணம் செலுத்தும் விருந்தினராக அங்கு இருந்துளார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று காலை வீட்டின் வளாகத்தை ஏன் சுத்தமாக வைத்திருக்கவில்லை என பவன்குமார் பூஜா நட்வரிடம் கேட்டுள்ளார். அப்பொழுது இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பவன்குமார் அருகிலிருந்த பூரிக்கட்டையால் பூஜா நட்வரை தாக்கியுள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தைகளாலும் பவன்குமார் திட்டியயுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் பவன்குமார் பூஜாவின் மேலாடைகளை கிழித்து அவரை கைகளால் சரமரியாக தாக்கியுள்ளார். அதே நேரத்தில் அந்தப் பெண்ணுடன் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க | 17 வயது இளம்பெண் வெறிச்செயல் - கழுத்து நெறித்து மூதாட்டி கொலை

இந்த சம்பவம் குறித்த பூஜா நட்வர் கொடுத்த புகாரின் பேரில் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பழவந்தாங்கல் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணை முடிவில் பூஜா நட்வர் குறிப்பிட்டிருந்த புகார் அனைத்தும் உண்மையென தெரியவந்தது. தற்போது அதன் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புப்பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதன்ப்டி பவன்குமார் கைது செய்யப்பட்டார், மேலும் அவரிடமிருந்து பெண்ணை தாக்க பயன்படுத்திய 1 பூரிக்கட்டை மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட பவன்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி பவன்குமார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார். 

மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரும் பவன்குமார் தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் என்பவருக்கு இந்தி மொழிபெயர்ப்பு மற்றும் அலுவலக உதவியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News