தமிழகத்தில் கொரோனாவின் புதிய உச்சம்: இன்று மட்டும் 34,875 பேர் பாதிப்பு, 365 பேர் பலி!!

புதனன்று தமிழ்நாட்டில் 34,875 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஐ எட்டியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 19, 2021, 09:08 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 34,875 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஐ எட்டியுள்ளது.
  • இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 365 பேர் தமிழகத்தில் இறந்தனர்.
தமிழகத்தில் கொரோனாவின் புதிய உச்சம்: இன்று மட்டும் 34,875 பேர் பாதிப்பு, 365 பேர் பலி!! title=

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவில் பெரிதாக வீழ்ச்சியைக் காண முடியவில்லை.

புதனன்று தமிழ்நாட்டில் 34,875 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஐ எட்டியுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,53,576 ஆக உள்ளது என மாநில சுகாதார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இன்று கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 365 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,734 ஆக உயர்த்தியுள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இன்று 23,863 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். 

இதனுடன் தமிழகத்தில் (Tamil Nadu) தொற்றிலிருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,26,915 ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ: தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு: மத்திய சுகாதார அமைச்சகம்

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 6,297 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையைத் (Chennai) தவிர, திருவாரூரில் 717, கிருஷ்ணகிரியில் 712, நெல்லையில் 665, நாகையில் 603, திருவண்ணாமலையில் 590, கடலூரில் 848, தஞ்சையில் 813, காஞ்சிபுரத்தில் 811, தேனியில் 808, சேலத்தில் 795, திருச்சியில் 1,459, ஈரோட்டில் 1,362, மதுரையில் 1,156, தூத்துக்குடியில் 928, கன்னியாகுமரியில் 884, கோவையில் 3,250, செங்கல்பட்டில் 2,275, திருவள்ளூரில் 1,778, திருப்பூரில் 1,573,  புதுக்கோட்டையில் 426, நாமக்கல்லில் 410, திண்டுக்கல்லில் 385, ராமநாதபுரத்தில் 378, கரூரில் 376, வேலூரில் 586, துருப்பத்தூரில் 544, விழுப்புரத்தில் 542, விருதுநகரில் 445, தென்காசியில் 427 பேர்  இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக 33,000-ஐத் தாண்டி இருந்த ஒற்றை நாள் தொற்றின் அளவு இன்று தமிழகத்தில் மிகப்பெரும் அதிகரிப்பைக் கண்டுள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் இன்று 91 பேர் இறந்தனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 85 பேர் உயிர் இழந்தனர். 

இன்று மட்டும் தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 1,307 சிறார்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 5 ஆம் தெதி தமிழகத்தில் 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

ALSO READ: முதல்வர் ஸ்டாலின் அதிரடி: கொரோனா தடுப்பூசி, மருந்துகள், ஆக்சிஜன் அனைத்தும் தமிழகத்திலேயே உற்பத்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News