முறைகேடு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்..! 6 மாதம் கெடு

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் ஆறு மாதங்களில் விசார்ணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 28, 2023, 03:25 PM IST
  • அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சிக்கல்
  • முறைகேடு புகாரை 6 மாதத்துக்குள் முடிக்க உத்தரவு
  • லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல்
முறைகேடு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்..! 6 மாதம் கெடு title=

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ்,  அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில், 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் படிக்க | ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு... மன்னார்குடியில் அண்ணாமலை சீற்றம்!

இதேபோல, கடந்த 2015 முதல் 2021ம் ஆண்டு வரை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 2,028 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் வழக்குப் பதிய உத்தரவிடக்கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி A.D. ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இரண்டு ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ஆறு மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படும் என உறுதி தெரிவித்தார். மேலும்  நீதிமன்றம் தீர்மானிக்கும் தேதியில் இரு புகார்தாரர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

 ஆறு மாதங்களில் விசாரணையை முடிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு உத்தரவாதத்தை ஏற்று, ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்குகளை முடித்து வைத்தார். மேலும், புகார்தாரர்கள் இருவரையும் டிசம்பர் 6ம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பிரபாகரன் மகள் துவாரகா திடீர் உரை..! அரசியல் வழியில் லட்சிய பயணம் தொடரும் என அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News