ஒரிரு நாட்களில் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை

Last Updated : May 30, 2017, 02:59 PM IST
ஒரிரு நாட்களில் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை title=

தமிழகத்தில ஒரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. அங்கு பரவலாக பல்வேறு இடங்களில் மழைபெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்து உள்ளது. தென்மேற்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் தொடரும். அடுத்த 24மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

Trending News