முடிந்தது டெல்லி மீட்டிங் - ஆதரவை மீட்க சுற்றுப்பயணம் செல்லும் ஓபிஎஸ்

தமிழ்நாடு முழுவதும் ஓ. பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 25, 2022, 02:06 PM IST
  • டெல்லியிலிருந்து இன்று மாலை திரும்புகிறார் ஓபிஎஸ்
  • தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பன்னீர்செல்வம்
 முடிந்தது டெல்லி மீட்டிங் - ஆதரவை மீட்க சுற்றுப்பயணம் செல்லும் ஓபிஎஸ் title=

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை கோஷமும், பன்னீருக்கு எதிரான கோஷமும் அதிகளவில் எழுப்பப்பட்டது.

அதுமட்டுமின்றி 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடத்தப்படுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

EPS, OPS

இதனால் அதிருப்தியடைந்த ஓபிஎஸ்ஸூம் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இது சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழு எனக்கூறி வெளியேறினர்.

அந்தச் சமயத்தில் பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வாட்டர் பாட்டில்களையும், காகிதங்களையும் வீசி அவர் பொதுக்குழுவுக்கு வந்த வாகனத்தின் டயர்களை பஞ்சராக்கினர்.

இப்படிப்பட்ட சூழலில் பொதுக்குழு முடிந்த அன்றே டெல்லி கிளம்பிய ஓபிஎஸ் அங்கு சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது மோடி, அமித்ஷா உள்ளிட்டோருடன் ஓபிஎஸ், அவரது மகன் ஓ. பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் இருந்தனர்.

EPS, OPS

அப்போது அதிமுக கட்சி விவகாரம் குறித்து மோடியிடமும், அமித்ஷாவிடமும் ஓபிஎஸ் பேசியதாகவும், இபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாகவும் தெரிகிறது.

இரண்டு நாள்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த ஓபிஎஸ் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு இன்று மீண்டும் தமிழகம் திரும்புகிறார். இதனால் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க | பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பி.எஸ்?

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் விஸ்வரூபம் எடுத்து விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மேலும் படிக்க | திமுக சந்தோஷப்பட வேண்டாம்.. உதயநிதி பட்டாபிஷேகத்தில் இதே தான் நடக்கும் - சி.வி.சண்முகம்

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு என்பது இனி கனவில்தான் நடக்கும். அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சி செய்கிறது. அதிமுகவை கம்பெனி போல் நடத்தி அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கின்றனர்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News