தமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு..!

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 6,785 பேருக்கு கொரோனா உறுதி..தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 88 பேர் உயிரிழப்பு!!

Last Updated : Jul 24, 2020, 07:10 PM IST
தமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு..! title=

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 6,785 பேருக்கு கொரோனா உறுதி..தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 88 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று மேலும் 6,785 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3320 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 6,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 6,729 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 56 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 6,785 பேரில் சென்னையில் மட்டும் 1,299 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 92,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் 114 ஆய்வகங்கள் (அரசு - 58 மற்றும் தனியார் - 56) உள்ளன. அதில், இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 22,23,019 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில்,  4,137 பேர் ஆண்கள், 2,648 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,21,389 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 78,337 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று மட்டும் 6,504 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கை 1,43,297 ஆக உள்ளது.

Image

Image

தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 66 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,320 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,132- பேர் சிகிச்சையில் உள்ளனர். 

ALSO READ | இனி கொரோனா பரிசோதனை முடிவுகளை வெறும் 30 நொடிகளில் பெறலாம்!!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்.... 

சென்னையில் 1299 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 92,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 4378 பேருக்கும், ராணிப்பேட்டையில் 222 பேருக்கும், விருதுநகரில் 423 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும், தூத்துக்குடி 308 பேருக்கும், செங்கல்பட்டில் 419 பேருக்கும், திருச்சியில் 217 பேருக்கும், திருவண்ணாமலையில் 134 பேருக்கும், மதுரையில் 326 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 22 பேரும், மதுரையில் 10 பேரும், விருதுநகரில் 6 பேரும், கன்னியாகுமரி, திருவள்ளூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருநெல்வேலியில் தலா 4 பேரும், திண்டுக்கல், ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், தென்காசி, தேனி, திருவண்ணாமலையில் தலா 2 பேரும், அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி, வேலூரில் தலா ஒருவரும் என 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Trending News