ஆயிரத்தை நெருக்கும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் 969 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 969-ஆக அதிகரித்துள்ளது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 11, 2020, 07:36 PM IST
ஆயிரத்தை நெருக்கும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் 969 ஆக அதிகரிப்பு title=

சென்னை: தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 969-ஆக அதிகரித்துள்ளது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பொறுத்த வரை மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக அரசு கட்டுப்படும். கொரோனா வைரஸ் தொற்றுவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தினர். எனவே நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை விரைவில் பிரதமர் தனது முடிவை அறிவிப்பார் எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசாங்கங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், உலகின் முக்கிய நகரங்களில் பணிநிறுத்தம் தொடர்கிறது. சனிக்கிழமையன்று, பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடனான வீடியோ காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 3-4 வாரங்கள் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை எனக் கூறினார்.

முதல்வர்கள் நிதி ஒதுக்கீடு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பை செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர் என்று புதுச்சேரி முதல்வர் வி நாராயணசாமி பிரதமரை சந்தித்த பின்னர் பி.டி.ஐ. செய்தி ஊடகத்திடம் கூறினார்.

வீடியோ அழைப்பு ஆலோசனைக்கு பின்னர் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கோவிட் -19 பரவுவதைத் தடுக்க ஏப்ரல் 30 வரை தேசிய தலைநகரில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவித்தார். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் ஒடிசாவுக்கு அடுத்தபடியாக டெல்லி மூன்றாவது மாநிலமாக மாறியுள்ளது. அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்படும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

கேரளாவில் இன்று 10 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. கண்ணூரிலிருந்து 7, கோழிக்கோட்டிலிருந்து 1, காசராகோடு 2. மொத்த வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 373 ஆக உள்ளது. அவற்றில் 228 செயலில் உள்ள வழக்குகள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

Trending News