18 MLAs தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும்: 3வது நீதிபதி

18 MLAs தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பு வழக்கி உள்ளார்.

Last Updated : Oct 25, 2018, 01:12 PM IST
18 MLAs தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும்: 3வது நீதிபதி title=

10:37 25-10-2018

சபாநாயகர் முடிவில் தவறு இல்லை, சபாநாயகரின் உத்தரவு செல்லும். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பு வழக்கி உள்ளார்.


10:35 25-10-2018

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பு வழக்கி உள்ளார்.

 

 


10:35 25-10-2018

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.


தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் நாள் EPS அணியும், OPS அணி ஒன்றாக இணைந்தன. மேலும் அன்று மாலை, அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். 

இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.

மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்றவேண்டும் எனவும், ஏன் ஒ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது எனவும், முதல்வருக்கு பதிலாக சபாநாயகர் தனபாலுவை நியமிக்க வேண்டும் என தெரிவித்தனர். 

இதனையடுத்து கட்சி தலைமைக்கு எதிராக எம்எல்ஏ-க்கள் இணைந்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்து தவறு எனவும். தமிழக அரசின் தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யமால், நேரடியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது. எனவே கடிதம் கொடுத்த எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் மனு அளிக்கப்பட்டது. மேலும் தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர்.

இந்நிலையில் இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Trending News