மூன்றாம்நாள் ஆட்டம் துவங்கியது; பால்லோ ஆணை தவிற்குமா இலங்கை

Last Updated : Jul 28, 2017, 10:53 AM IST
மூன்றாம்நாள் ஆட்டம் துவங்கியது; பால்லோ ஆணை தவிற்குமா இலங்கை title=

இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன் முதல் போட்டி புதனன்று காலேவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. புஜாரா (144), ரகானே (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர். 

இரண்டாம் நாளான இன்று தொடர்ந்த விளையாடிய இந்திய அணி 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. களத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் 54(91)  மற்றும் தில்ருவன் பெரேரா (6) இருந்தனர். இந்தியாவை விட 446 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி போராடி வருகிறது. 

இந்நிலையில் முதல் டெஸ்டின் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று சற்று முன் துவங்கியது. தற்போது 5௦ ஓவர் முடிவில் 175/5 ரன்களுடன் போராடிவருகிறது. 

முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தில் ஆசேலா குணரத்னே காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில் இலங்கை 1௦ பேட்ஸ்மேன்களை மட்டுமே கொண்டு விளையாட முடியம் என்பதால், இன்னும் இலங்கை வசம் 4 விகேட்டுகள் மட்டுமே உள்ளது. இலங்கை அணி பால்லோ ஆணை தவிற்க இன்னும் 123 ரன்கள் தேவைபடுகிறது. இலங்கை பால்லோ ஆணை தவிற்குமா? இல்லையா? என்பது ரசிகர்களின் எதிர்பரபக உள்ளது.

Trending News