சாஹல் விவகாரம், போதையில் இருந்த வீரர் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்; சேவாக்

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், யுஸ்வேந்திர சாஹலிடம் கிரிக்கெட் வீரரின் பெயரை வெளியிடுமாறு கேட்டுள்ளார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 9, 2022, 07:43 AM IST
சாஹல் விவகாரம், போதையில் இருந்த வீரர் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்; சேவாக் title=

யுஸ்வேந்திர சாஹல் இந்தியன் பிரீமியர் லீக் 2022-ல் தனது புதிய அணியான ராஜஸ்தானில் சிறப்பாக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை நடந்த போட்டிகளில் முக்கிய கட்டங்களில் நேர்த்தியாக பந்து வீசி, விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தற்போது, ​​ஐபிஎல் 2022 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை எடுத்துள்ளார், மேலும் சாஹல் தனது சிறப்பான ஆட்டத்தை தொடருவார் என்று நம்புகிறார். மைதானத்திற்கு வெளியேவும் சாஹல் மிகவும் சுட்டித்தனமான, அனைவராலும் விரும்ப பட கூடிய வீரராகவும் இருந்து வருகிறார். அவருடைய எளிதாக அணுகுமுறைக்கு அனைரையும் ரசிக்க வைக்கிறது. இருப்பினும், 2013-ல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடியபோது, ​​ஒரு வீரர் குடிபோதையில் இருந்தபோது சாஹல் ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், கருண் நாயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் சாஹல் "கம்பாக் ஸ்டோரிஸ் " என்ற தலைப்பில் பேசினார். அதில் சாஹல் ஒரு சம்பவத்தைப் பற்றித் பேசி, இது பலருக்குத் தெரியாது என்றும் கூறினார். 2013 ஆம் ஆண்டில் குடிபோதையில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஒருவர், தன்னை பால்கனியில் தொங்கவிட்டார் எனவும், ​​அதிஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன் என்றும், அவரின் பெயரை கூற விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | IPL2022: பும்ரா மற்றும் நிதீஷ் ராணாவுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ

 

 

என் கதை, சிலருக்குத் தெரியும், நான் இதைப் பற்றி பேசவில்லை, இதை நான் பகிரவில்லை. 2013-ல், நான் மும்பை இந்தியன்ஸுடன் இருந்தேன், பெங்களூரில் ஒரு போட்டி இருந்தது. அதன் பிறகு ஒரு கெட் டுகெதர் இருந்தது, ஒரு வீரர் இருந்தார், மிகவும் குடிபோதையில் இருந்த அவரது பெயரை நான் கூற மாட்டேன், அவர் மிகவும் குடிபோதையில் இருந்தார், அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார், அவர் என்னை அழைத்தார், அவர் என்னை வெளியே அழைத்துச் சென்றார், அவர் என்னை பால்கனியில் இருந்து தொங்கவிட்டார். என் கைகள் அவனைச் சூழ்ந்தன. நான் பிடியை இழந்திருந்தேன், நான் 15 வது மாடியில் இருந்தேன். திடீரென்று அங்கு இருந்த பலர் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனக்கு ஒருவித மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் எனக்கு தண்ணீர் கொடுத்தார்கள், நான் ஒரு குறுகிய காலத்தில் தப்பித்துவிட்டேன் என்று நான் உணர்ந்த ஒரு சம்பவம் இது. சிறிய தவறு நடந்திருந்தால், நான் கீழே விழுந்திருப்பேன். அதன்படி இந்த சம்பவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது, நாம் எங்கிருந்தாலும், என்ன நிலையில் இருந்தாலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதே.என்று சாஹல் வீடியோவில் அஸ்வின் மற்றும் நாயரிடம் கூறினார்.

இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர் யார் என்று கூறுங்கள் என்று ட்விட்டரில் கேட்டுவந்தனர். 

இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று கூறியுள்ளார் அதன்படி அதில்., குடிபோதையில், சாஹலிடம் அவ்வாறு நடந்து கொண்டது யார் என்பது தெரிவது மிகவும் முக்கியம். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் இதனை வேடிக்கையாக கருதமுடியாது. மேலும் அந்த வீரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறியவேண்டியது உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஷேவாக் வெள்ளிக்கிழமை மாலை 4.42 மணிக்கு இந்த ட்விட்டை பதிவு செய்திருந்தார். ஆனால் ட்விட் செய்த சில மணி நேரம் கழித்து அவர் அந்த பதிவை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மும்பை அணி ஹாட்ரிக் தோல்வி: மோசமான ஆட்டத்துக்கு என்ன காரணம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News