முகமது ஷமி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்த மனைவி ஹசின் ஜகான்

முகமது ஷமிக்கு அலிஷ்பா தவிர வேறு ஒரு பெண்ணுடனும் சட்டவிரோதமாக உறவு வைத்திருந்தார் என அவரது மனைவி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 23, 2018, 01:22 PM IST
முகமது ஷமி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்த மனைவி ஹசின் ஜகான் title=

இந்திய வேகபந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை படுத்துக்கின்றனர். என்னை கொல்ல சதி செய்கின்றனர். இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன் என ஹசின் ஜகான் செய்தியாளரிடம் இந்த மாதம் முதல் வாரத்தில் கூறியிருந்தார்.

முகமது ஷமியை நடுரோட்டில் வைத்து அடிக்க வேண்டும் -மனைவி ஆவேசம்

இதற்கு முகமது ஷமி, என் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனமும் பொய். இது எனக்கு எதிராகவும், என்னை அசிங்கபடுத்தவும், என் விளையாட்டை கெடுக்கவும் முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.

இதனையடுத்து, முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கொல்கத்தா போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த ஜனவரி மாதம் முதல் பாகிஸ்தானை சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்ததாகவும், மேலும் பல பெண்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளது எனவும், இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் பேச்சை கேட்டு கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதாக கூறியிருந்தார். மேலும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

இதைக்குறித்து கொல்கத்தா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வரும் 23-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார் ஹசின் ஜகான்.

ஹசின் ஜகான்-னின் குற்றச்சாற்றை மறுத்த பாகிஸ்தான் பெண் அலிஷ்பா

இந்நிலையில், இன்று முகமது ஷாமிக்கு எதிராக மீண்டும் ஒரு புதிய குற்றச்சாற்றை வைத்துள்ளார். அதாவது லண்டன் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் ஒரு பெண்ணை முகமது ஷாமி அறிமுகப்படுத்து வைத்தார். அந்த பெண்ணின் பெயர் மஞ்சு மிஸ்ரா என்றும், அந்த பெண்ணுடனும் ஷாமி சட்டவிரோதமாக உறவு வைத்திருந்தார் எனக் கூறியுள்ளார்.

Trending News