ஹார்டிக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் உள்ளார் -ரஜினிகாந்த்!

ஹார்டிக் பாண்டியாவின் தனிப்பட்ட பயிற்சியாளர் எஸ்.ரஜினிகாந்த், இந்தியாவின் ஆல்ரவுண்டர் தற்போது உறுதியாக உள்ளார் எனவும், BCCI-யால் உடற்பயிற்சி சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 12, 2020, 12:30 PM IST
ஹார்டிக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் உள்ளார் -ரஜினிகாந்த்! title=

ஹார்டிக் பாண்டியாவின் தனிப்பட்ட பயிற்சியாளர் எஸ்.ரஜினிகாந்த், இந்தியாவின் ஆல்ரவுண்டர் தற்போது உறுதியாக உள்ளார் எனவும், BCCI-யால் உடற்பயிற்சி சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

என்றபோதிலும் பாண்டியா தனது பந்துவீச்சு பணிச்சுமையை சோதிக்க தனது பயிற்சியைத் தொடர வேண்டும் என்றம் அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “அவர் 100% உடற்தகுதியுடன் உள்ளார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் சர்வதேச போட்டிகளின் பணிச்சுமையை எடுக்க விரும்பவில்லை. பாண்ட்யாவுக்கு இதுவரை உடற்பயிற்சி சோதனை எதுவும் நடத்தப்படவில்லை, எனவே அவர் ஏதேனும் சோதனையில் தோல்வியடைந்தாரா என்ற சந்தேகமும் தேவையில்லாதது” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உடற்தகுதி தேர்வில் ஹார்டிக் தோல்வியுற்றதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், சமகாலத்தில் அவர் இந்தியா A அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார், இது நியூசிலாந்து A-க்கு எதிரான விளையாடுவிறுத்த அணியாகும். 

“ஹார்டிக் தகுதியற்றவர் அல்லது ஏதேனும் சோதனையில் தோல்வியுற்றாரா என்ற கேள்விக்கு இடம் இல்லை. அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார், அவர் இப்போது யோயோ தேர்வில் பங்கேற்றால் 20 மதிப்பெண் பெற முடியும். அவர் தனது 20 மீட்டரையும் சிரமமின்றி செய்கிறார். எனினும் நான் ஏன் அவரை அணியில் இருந்து வெளியே இழுத்தேன் என்றால், அது அவரது பந்துவீச்சு சுமை காரணமாகவே. பந்துவீச்சிற்கான செயல்பாடு இன்னும் பயிற்சியில் உள்ளது.” என்று ரஜினிகாந்த் மேலும் தெரிவித்தார்.

அனைத்து தரவுகளும் பயிற்சியாளரால் BCCI மற்றும் NCA-க்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. நியூசிலாந்தில் எட்டு வெள்ளை பந்து விளையாட்டுகளை இந்தியா விளையாடும், மேலும் தேர்வாளர்கள் 15 பேருக்கு பதிலாக 16 அல்லது 17 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்வார்கள் என்ற சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Trending News