குருவின் அருளால் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தீபாவளி முதல் மாறும்

குருவின் வக்ர நிலை, அதிகப்படியான நல்ல பலன்களை அள்ளித் தரும். வேலை மற்றும் வியாபாரத்தில் மகத்தான வெற்றிகள் கிடைக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 5, 2022, 01:47 PM IST
  • இந்த ராசிகளுக்கு சூப்பர் நேரம்.
  • ராஜயோகத்தால் தலைவிதி மாறும்.
  • நவம்பர் 23 வரை குரு இந்த ராசியில் இப்படியே சஞ்சரிப்பார்.
குருவின் அருளால் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தீபாவளி முதல் மாறும் title=

குருவின் வக்ர நிலை: குருவின் வக்ர நிலை அனைத்து 12 ராசிக்காரர்களுக்கு வெவ்வேறு விளைவுகளையும் தக்கத்தையும் ஏற்படுத்தும். இருப்பினும் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த குருவின் வக்ர நிலை, அதிகப்படியான நன்மை பலன்களை அள்ளித் தரும். இப்போது, இந்த ராசிக்காரர்களுக்கு, வேலை மற்றும் வியாபாரத்தில் மகத்தான வெற்றிகள் கிடைக்கும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர நிலை எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.

கடக ராசி: வியாழன் கிரகத்தின் வக்ர நிலை கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக பலனை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். கடக ராசிக்காரர்கள் தொழில் சம்பந்தமாக நீண்ட பயணங்கள் செய்ய முடியும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள் மற்றும் பல தடைபட்ட வேலைகளை நீங்கள் சுலபமாக முடிக்க முடியும். நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் நிவாரணம் கிடைக்கும். அதேபோல் பிள்ளைகளின் படிப்பில் உறுதியாக இருப்பீர்கள்.

மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழன் கிரகத்தின் வக்ர நிலை புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், உத்தியோகத்தில் புதிய பொறுப்பு, பதவி உயர்வு அல்லது ஊதிய அதிகரிப்பு உங்களுக்கு ஏற்படலாம். வியாபாரத்தில் பல புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். உங்கள் வீட்டில் சுப காரியங்களும் நடைப்பெறலாம்.

ரிஷப ராசி: வியாழனின் கிரகத்தின் வக்ர நிலை ரிஷப ராசிக்காரர்களுக்கு பன்மடங்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் நிதிப் பிரச்சனைகள் இந்த காலகட்டத்தில் முடிவுக்கு வரும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்பட்டு வியாபாரம் விரிவடையும். பல பெரிய நிறுவனங்களின் ஆர்டர்களையும் பெறக்கூடும். இந்த வகர் நிலை காலத்தில் உங்களுக்கு புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மற்றும் நாள்பட்ட நோய்களிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | செப்டம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News