ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கஷ்டங்கள் விலகி ஓடும், அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்

Rahu Ketu Transit 2023 Effects:  கேது பெயர்ச்சி ஆனவுடனேயே சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். இவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 25, 2023, 06:52 PM IST
  • கேதுவின் சஞ்சாரத்தால், மகர ராசிக்காரர்கள் மிகுந்த நன்மை அடைவார்கள்.
  • இந்த காலத்தில் நன்றாக சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கஷ்டங்கள் விலகி ஓடும், அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் title=

ராகு கேது பெயர்ச்சி 2023 பலன்கள்: ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகமும் அதன் இயக்கங்களை மாற்றிக்கொண்டே இருக்கும். மேலும் அந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். ஜோதிடத்தில் ராகு-கேது நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இவை இரண்டும் எப்போதும் வக்ர நிலையிலேயே நகர்கின்றன. இவை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற ஒன்றரை ஆண்டுகள் ஆகும். இப்படிப்பட்ட நிலையில், ஒருவரது ஜாதகத்தில் ராகு-கேது அசுப நிலையில் இருந்தால், அவர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும். 

இந்த வருடம் அக்டோபர் 30-ம் தேதி ராகு சஞ்சாரம் செய்யப் போகிறார். ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் பிரவேசிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேது பெயர்ச்சி ஆனவுடனேயே சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். இவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

தனுசு

துலாம் ராசியில் கேது பெயர்ச்சியானவுடன் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். இந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக பெரிய வெற்றியை அடையக்கூடும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்கப்படும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் நல்ல செய்தியைத் தரும். இவர்கள் கஷ்டங்களிலிருந்து விடுபடுவார்கள். மன உளைச்சல் மற்றும் துன்பங்களில் இருந்து விடுபட முடியும். ஆரோக்கியம் மேம்படும். பண ஆதாயம் உண்டாகும், அதன் காரணமாக பொருளாதார நிலை வலுப்பெறும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் முடிவடையும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும்.

மேலும் படிக்க | வீட்டிற்கு தரித்திர யோகத்தை கொண்டு வரும் ‘சில’ ஆபத்தான செடிகள்!

மகரம்

கேதுவின் சஞ்சாரத்தால், மகர ராசிக்காரர்கள் மிகுந்த நன்மை அடைவார்கள். இந்த காலத்தில் நன்றாக சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் பதவிக்கு வரலாம். வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள்.

சிம்மம் 

அக்டோபரில் கேது சஞ்சரிக்கும் போதே சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். கடின உழைப்பின் முழு பலனைப் பெறத் தொடங்குவீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும். இந்த நேரத்தில் சொத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டும் கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கும்பத்தில் உதயமாகும் சனி! அளவில்லாத அதிர்ஷ்டத்தை பெறும் ‘சில’ ராசிகள்!

Trending News