Guru Peyyarchi: மீன ராசிக்கு சஞ்சரித்தார் குரு! மேஷம் முதல் கன்னி ராசிக்கு பலன்கள்

Jupiter Direct in Pisces: இன்று மீன ராசிக்கு பெயர்ச்சியான குரு பகவான், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். நவம்பர் 24, 2022 முதல், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும், பல வித நன்மைகள் கிடைக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2022, 06:58 AM IST
  • மீனத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குருவால் மேஷ ராசிக்காரர்களுக்கு அமோகம்
  • ரிஷபத்திற்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
  • கடகத்திற்கு பதவி உயர்வு கிடைக்கும்
Guru Peyyarchi: மீன ராசிக்கு சஞ்சரித்தார் குரு! மேஷம் முதல் கன்னி ராசிக்கு பலன்கள் title=

நியூடெல்லி: இன்று, நவம்பர் 24ம் தேதி அதிகாலை 4.27 மணிக்கு மீன ராசிக்கு தேவகுரு என்று அழைக்கப்படும் குரு பகவான் பிரவேசித்தார். முன்னதாக, இந்த ஆண்டு ஜூலை 28 அன்று வக்ர கதியில் பயணித்தார். தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கும், ஜாதகத்தில் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் குரு சஞ்சரிப்பவர்களுக்கு, நல்ல செய்திகள் கிடைக்கும். அனைத்து 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன்கள், வெவ்வேறு போல இருக்கும். இதில் 12 ராசிகளுக்குமான ராசிபலன்களில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கான பலன்களை தெரிந்துக் கொள்வோம். 
 
மேஷம்: ராசியிலிருந்து பன்னிரண்டாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால், அதிக அவசரம் காட்டுவீர்கள், வீண் ஆடம்பர செலவு செய்ய வேண்டி வரும். குடும்பத்தில் ஒரு சுபநிகழ்ச்சி வரும், அதற்காக அதிக செலவுகள் ஏற்படும். பயணங்கள் மற்றும் மதச் சடங்குகளுக்காகவும் செலவுகள் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் யாருக்கும் அதிக பணம் கொடுக்க வேண்டாம், இல்லையெனில் பண விரயம் ஏற்படும் வாய்ப்புகளும் வாராக் கடன்கள் அதிகரிக்கும் போக்கும் காணப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். நிலச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் தீரும். பயணம் செய்யும் யோகத்தையும், மேஷ ராசியினருக்கு குரு பெயர்ச்சி ஏற்படுத்தும்

மேலும் படிக்க | விருச்சிகத்தில் உதயமாகும் சுக்கிரன் ‘3’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார்!.
 
ரிஷபம்: ராசியிலிருந்து பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் சிறப்பான வெற்றியைத் தருவார். வருமானத்திற்கான வழிகள் அதிகரிப்பதோடு, வேலை மற்றும் வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் ஏதேனும் புதிய ஒப்பந்தத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் அதற்கான சிறப்பான நேரம் இது .

அரசுத் துறைகளில் காத்திருக்கும் பணிகள் முடிவடையும். உங்கள் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி நீங்கள் வேலை செய்தால், வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கும், போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் குரு பெயர்ச்சி நல்ல வாய்ப்புகளை கொடுக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
 
மிதுனம்: ராசியிலிருந்து பத்தாவது வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஆட்சி அதிகாரத்தின் முழுமையான மகிழ்ச்சியை வழங்குவார். அரசாங்க வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு சிறப்பாக இருக்கும். வேலையை மாற்ற முயற்சிப்பவர்களுக்கும் நல்ல நேரம் இது.

நிலம் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். வீடு-வாகனம் வாங்குபவர்களுக்கும் சாதகமான காலம் இது. குடும்பத்தில் சுப காரியங்களுக்கான வாய்ப்பு அமையும். திருமணப் பேச்சுக்கள் வெற்றியடையும்.

மேலும் படிக்க | மிதுனம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை

கடகம்: ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் வியாழனின் தாக்கம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மதம் மற்றும் ஆன்மீக விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும், எடுக்கும் முடிவுகள் மற்றும் செய்யும் பணிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமணப் பேச்சு வார்த்தையும் வெற்றி பெறும். பிள்ளைகள் தொடர்பான கடமைகள் மற்றும் பொறுப்பு நிறைவேறும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு மற்றும் குழந்தை பிறக்கும் வாய்ப்பும் உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மேலும் படிக்க | நவ பஞ்சம தோஷம் படுத்தும் பாடு! பாவம் இந்த 4 ராசிகள்: இது செவ்வாய்-கேது சேர்க்கை தோஷம்
 
சிம்மம்: ராசியிலிருந்து எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் குருவினால், எதிர்பாராத பல ஏற்ற தாழ்வுகளை சந்திப்பீர்கள். பணியிடத்தில் சதியால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும். நீதிமன்றம் தொடர்பான விவகாரங்களை வெளியில் தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

இதையெல்லாம் மீறி பொருளாதாரம் வலுவாக இருக்கும். எனவே வேலையில் பிரதிபலிப்பாக இருங்கள்.வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது வெற்றிகரமான சமயமாக இருக்கும். புத்தி கொள்முதலுக்கான காலம் இந்த குரு பெயர்ச்சி என்றே சொல்லலாம்.
 
கன்னி: ராசியிலிருந்து ஏழாவது வீட்டிற்கு மாறும் குரு பகவான், நீண்ட காலமாக உங்கள் மனதில் நிலவும் பதற்றத்தை அமைதிப்படுத்துவார். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண வாழ்வில் இனிமை உண்டாகும். மாமியார் தரப்பிலும் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அரசாங்கம் தொடர்பான வேலைகள் சாதகமாக முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். இந்தக் காலத்தில் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்க்கவும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஞானக்காரகரின் அருளால் அருமையான வாழ்க்கை அமையப்போகும் 3 ராசிக்காரர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News