செவ்வாய் பெயர்ச்சியினால் உருவாகும் ‘தரித்திர யோகம்’; கவனமாக இருக்க வேண்டிய ‘சில’ ராசிகள்!

செவ்வாய் பெயர்ச்சி 2022: செவ்வாய் அக்டோபர் 16ஆம் தேதி மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 10, 2022, 08:24 PM IST
  • பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரம் மந்தமாக இருக்கும்.
  • வணிகத்தில் சிறிது பின்னடைவு ஏற்படலாம்.
  • மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
செவ்வாய் பெயர்ச்சியினால் உருவாகும் ‘தரித்திர யோகம்’; கவனமாக இருக்க வேண்டிய ‘சில’ ராசிகள்!  title=

ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. கிரகப் பெயர்ச்சியின் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். செவ்வாயின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிக்காரர்களும் சுப மற்றும் அசுப விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் சில ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தரித்திர யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் போது, ​​சில ராசிக்காரர்களுக்கு பணம் இழப்பு மற்றும் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். இதனால், அந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில், செவ்வாய் பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம். 

ரிஷபம்:

மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கும் போது இந்த ராசிக்காரர்களுக்கு தரித்திர யோகம் உருவாகும். இந்த ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தின் கேந்திரத்தில் எந்த சுப கிரகமும் இல்லாததால் இவ்வாறு நடக்கலாம் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் வலுவிழந்து அஸ்தமனம் அடைவார். இதனால் இவர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரம் மந்தமாக இருக்கும். பணத்தை முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவும். மேலும், இந்த நேரத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | அக்டோபரில் கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் 

சிம்மம்:

தரித்திர யோகம் இந்த ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கும். இந்த ராசியின் அதிபதி சூரிய பகவான். அவர் அக்டோபர் 17-ம் தேதி துலாம் ராசியில் நுழையப் போகிறார். அதே நேரத்தில், இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் கேந்திர வீட்டில் சுப கிரகம் இல்லை. அதன் காரணமாக இந்த யோகம் உருவாகிறது. இத்தகைய சூழ்நிலையில், சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை. இந்த காலகட்டத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். எனினும் அதிர்ஷ்டம் உங்களை சிறிது காப்பாற்றும். ஆனால் வணிகத்தில் சிறிது பின்னடைவு ஏற்படலாம். 

விருச்சிகம்:

இந்த யோகம் விருச்சிக ராசிகளுக்கும் அசுபமாக இருக்கும். இந்த ராசிக்கு அதிபதியான செவ்வாய் எதிரி ராசியின் மரண ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் பாபகர்தரி யோகம் உருவாகிறது. அதே சமயம் கேதுவின் நவமி பார்வையும் இந்த ராசிக்காரர்கள் மீது விழுவதால் கேந்திர வீட்டில் சுப கிரகம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய வேலைகள் எதையும் இப்போதே தொடங்க வேண்டாம்.பரிவர்த்தனைகளில் கவனமாக இருப்பது சிறப்பு. வியாபாரத்தில் லாபம் குறையும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News