மகாலட்சுமியின் அருளால் செல்வம் கொழிக்க செய்ய வேண்டியவை!

அன்னை மகாலட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தருபவள். அவள் அருள் இல்லாமல் அதிர்ஷ்டம் மற்றும் செல்வமும் கிடைக்காது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 17, 2022, 05:24 PM IST
  • பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது.
  • மகாலட்சுமியின் அருளால் செல்வத்தை விரைவாக அடைவது வாழ்க்கையில் சாத்தியமாகும்.
  • செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைந்து பரிபூரணமாக ஆசி வழங்குகிறார்.
மகாலட்சுமியின் அருளால் செல்வம் கொழிக்க செய்ய வேண்டியவை! title=

பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. உலகில் யார் செல்வத்தைப் வேண்டாம் என சொல்வார்கள். இன்று, செல்வம் பெருக, மகா லட்சுமியின் மனம் குளிரவேண்டும். அன்னை மகாலட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தருபவள். அவள் அருள் இல்லாமல் அதிர்ஷ்டம் மற்றும் செல்வமும் கிடைக்காது. அவள் அருள் யாருக்கு கிடைக்கும் யாருக்கு கிடைக்காது என்பதை அறிந்து கொள்ளலாம். 

ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார், ஆனால் சில எளிய ஜோதிட பரிகாரங்களையும், பழக்கங்களையும் பின்பற்றினால், மகாலட்சுமியின் அருளால் செல்வத்தை விரைவாக அடைவது வாழ்க்கையில் சாத்தியமாகும். 

கீழே குறிப்பிட்டு செயல்களால் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைந்து பரிபூரணமாக ஆசி வழங்குகிறார்: 

1.  வெள்ளிக்கிழமை அன்னை லட்சுமிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை முறையாக வணங்கத் தொடங்குங்கள். தேவிக்கு இளஞ்சிவப்பு பூக்களை கொண்டு பூஜியுங்கள். ரோஜா பூக்கள் அன்னை லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமானவை.

2. அன்னையை வழிபட, ஸ்ரீலட்சுமி சரஸ்ரநாமம் அல்லது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் ஜபிக்கலாம் அல்லது ஸ்ரீசுக்தம் பாராயணம் செய்யலாம். தாமரைக்காசுகளை வைத்து பூஜிக்கலாம் (108 காசுகள்). வீட்டில் இருக்கும் குறைகள் நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருக செய்ய வீட்டின் பூஜை அறையில் மகாலட்சுமி எந்திரத்தை வைத்து பூஜித்து வழிபடவும்.

மேலும் படிக்க |  அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் ‘குரு’ வலுவாக இருக்க செய்ய வேண்டியவை!

3.  வீட்டில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மணம் நிறைந்த சூழல் இருக்க வேண்டும். வீட்டில் எங்கும்  குப்பை சேர அனுமதிக்க வேண்டாம். வீட்டின் கூரையில் குப்பை சேர்ந்தால், பொருளாதார சிக்கல் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகிறது. இது உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.

4.  சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது ஒருபோதும் தூங்க வேண்டாம்.

5. முடிந்தவரை தானம் செய்யவும். பசு அல்லது நாய்க்கு உணவளியுங்கள். யாசகம் கேட்டு வருபவருக்கு உணவு கொடுங்கள்.

6. வீடு, கடை-தொழிற்சாலையில் வடக்கு, கிழக்கு மற்றும் ஈசான மூலையை மூட வேண்டாம். அங்கே மணம் நிறைந்த பூக்களை வைக்கலாம். 

7. சுத்தமான ஆடைகளை அணியுங்கள். வாசனை திரவியத்தைப் பயன்படுத்துங்கள்.

8.  வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள். அன்றைய தினத்தில் சிறப்பு பூஜை செய்யலாம். பசு நெய் தீபம் ஏற்றுவது வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை கொண்டு வரும்.  இரண்டு முக விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது. முடிந்தால் ஐந்து முக விளக்கு ஏற்றலாம். இதனால் மகா லட்சுமியின் ஆசி கிடைத்து செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க | சிம்ம ராசியில் பிரவேசிக்கும் சூரியன்; அடுத்த 5 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

மேலே கூறியவற்றை தொடர்ந்து கடைபிடித்தால், மகாலட்சுமியின் அருள் பூரணமாக கிடைத்து, செல்வம் பெருகும். நிதி சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News