பாண்டா குட்டிக்கு புட்டி பால் கொடுத்த ஊழியர்! வைரலாகும் வீடியோ!

மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அங்குள்ள பாண்டா கரடி குட்டிகளுக்கு ஃபீடிங் பாட்டிலில் உணவளித்த காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Last Updated : Feb 25, 2022, 11:24 AM IST
  • பல விலங்குகளின் குறும்பான வீடியோக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறது.
  • பாண்டாவிற்கு ஊழியர் உணவளிக்கும் வீடியோ வைரல்
பாண்டா குட்டிக்கு புட்டி பால் கொடுத்த ஊழியர்! வைரலாகும் வீடியோ! title=

பாண்டா கரடிகளின் குறும்பு வீடியோக்கள் பல இணையத்தில் உலாவி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  அவை வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.  பல விலங்குகளின் குறும்பான வீடியோக்கள் விரைவில் பலரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறது.  தற்போது மிருகக்காட்சிசாலையில் உள்ள பாண்டா கரடி குட்டிகளுக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் குழந்தைக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பது போல அந்த  குட்டிகளுக்கு உணவளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

panda

மேலும் படிக்க | காட்டெருமையை ஓடவிட்ட குட்டியானை - வைரல் வீடியோ

இந்த வைரல் வீடியோவானது ட்விட்டரில் பய்டெங்கேபைடன் என்பவரது பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவில், மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாதுகாப்பபு ஆடைகள் மற்றும் முகக்கவசம் அணிந்துகொண்டு மரங்கள் அடுக்கப்பட்டுள்ள ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.  அவர் மடியில் சிறிய குழந்தையை போன்று பாண்டா கரடி குட்டி ஒன்றையும் வைத்திருக்கிறார், மேலும் அவருக்கு பக்கத்தில் மற்றொரு குழந்தை போல இன்னொரு பாண்டா கரடி குட்டியும் இருக்கிறது.  இவர் மடியில் படுத்திருக்கும் அந்த குட்டிக்கு குழ்நதைகளுக்கு உணவளிப்பது போன்று ஃபீடிங் பாட்டில் மூலம் அதற்கு உணவளித்து கொண்டிருக்கிறார்.  அப்போது அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு குட்டி அந்த ஊழியரின் ஆடைகளை இழுத்து குறும்புடன் விளையாடுகிறது.  அடுத்ததாக அவருக்கு அருகில் மற்றொரு பாண்டா குட்டி அமைதியாக படுத்துக்கொண்டு இருக்கிறது.

 

இந்த காட்சிகள் இணையத்தில் வீடியோவாக பதிவேற்றப்பட்டதையடுத்து நெட்டிசன்கள் பலரும் இதனை ரசிக்கின்றனர்.  இந்த காட்சி பலரின் இதயங்களையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.  இதுவரை இந்த வீடியோவை 200,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.  இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து பலரும் பாண்டாவின் பராமரிப்பாளராக தாங்களும் மாற வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.  சில பயனர்கள் பாண்டாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘தலகீழ நின்னாவது உன்ன.....’ நாளைக்கு கல்யாணம், இன்னிக்கு இது தேவையா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News