புலியிடம் சிக்கிய நபர்! சாமர்த்தியமாக உயிர் தப்பும் வைரல் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் பாந்தரா மாவட்டத்தில் புலியிடம் சிக்கிக்கொண்டவர் உயிர் தப்பிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Last Updated : Jan 27, 2020, 02:29 PM IST
புலியிடம் சிக்கிய நபர்! சாமர்த்தியமாக உயிர் தப்பும் வைரல் வீடியோ title=

மகாராஷ்டிரா மாநிலம் பாந்தரா மாவட்டத்தில் புலியிடம் சிக்கிக்கொண்டவர் உயிர் தப்பிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசம் - மகாராஷ்டிரா எல்லையில் உள்ள கைர்லாஞ்சி பகுதியில் உள்ள வயல்வெளிக்குள் கடந்த சனிக்கிழமை திடீரென புலி ஒன்று புகுந்தது. அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒருவரை சுற்றிவளைத்த புலி அவரைத் தாக்க முற்பட்டது. 

அப்போது அந்த புலியிடம் சிக்கிக் கொண்ட நபர், மிக சாமர்த்தியமாக அங்கிருந்து அசையாமல் அப்படியே படுத்து விட்டார். அந்த புலி அவர் அருகே அமர்ந்து காத்து கொண்டிருந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் ஒன்றாகக் கூடி கூச்சலிடத் தொடங்கினர். அந்த சத்தத்தை கேட்ட புலி, என்ன செய்வது அறியாமல் அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தது. பின்னர் சிறுது நேரம் கழித்து அந்தப் புலி, அந்த வயல்வெளியை கடந்து  தெறித்தோடியது. அதன்பின் சிக்கிக் கொண்ட அந்த நபர் எழுந்து மிக இயல்பாக நடந்து சென்றார். 

இந்தக் காட்சியை கூடியிருந்த கூட்டத்தினர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விடியோவை வனத்துறை அதிகாரி ட்விட்டரில் பதிவேற்றியதால் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News