Viral Video: சாலையை நோக்கி படையெடுத்த பாம்புகள்! அசால்டாக அள்ளி வீசும் நபர்!

இணைய உலகில், சமூக ஊடகங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளித் தருவதில் வல்லவை. அங்கு தினம் தினம் பகரப்படும் எண்ணிலடங்காத வீடியோக்கள் நம்மை பல சமயங்களில் வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன அல்லது பயத்தில் உறைய வைத்து விடுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 11, 2023, 02:55 PM IST
  • சாலையில் நூற்றுக்கணக்கான பாம்புகள் படையெடுத்து வருவதைக் காணலாம்.
  • வைரலாகும் பாம்பு வீடியோ.
  • பாம்பை அவர் எடுத்து வீசும் விதத்தை பார்த்து, வெகு தொலைவில், உள்ளவர்கள் அதனைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள்.
Viral Video: சாலையை நோக்கி படையெடுத்த பாம்புகள்! அசால்டாக அள்ளி வீசும் நபர்! title=

இணைய உலகில், சமூக ஊடகங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சர்ர்யங்களையும் அள்ளித் தருவதில் வல்லவை. அங்கு தினம் தினம் பகரப்படும் எண்ணிலடங்காத வீடியோக்கள் நம்மை பல சமயங்களில் வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன அல்லது பயத்தில் உறைய வைத்து விடுகின்றன.  அதிலும் பாம்பு வீடியோக்கள் மிகவும்  எளிதில் வைரலாகும். பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விரும்பி பார்க்கப்படுகின்றன. எவ்வளவு பாம்பு வீடியோக்களை நாம் பார்த்தாலும், நம் கண்முன்னால் ஒரு பாம்பு வந்தால், சப்த நாடியும் ஒடுங்கித் தான் போகும். அதனால் தான் பாம்பு என்றால் படையே நடுங்கும் என கூறினார்கள். ஆனால், வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபர் ஒன்றல்ல, இரண்டல்ல,ம் பாம்பின் படையை கண்டு அஞ்சாமல் எதிர்கொள்ளும் விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு பாம்பு வீடியோவைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில், காரில் இருந்து இறங்கிய ஒருவர் படை யெடுத்து வரும் பாம்புகளை கையில் எடுத்து ஆழமான பள்ளத்தில் வீசத் தொடங்குகிறார். சாலையில் நடந்து சென்றவர்கள் இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க | அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு

வைரலாகும் பாம்பு வீடியோவை இங்கே காணலாம்:

 

 

மலையில் படையெடுத்த பாம்புகள்

பாம்பை அவர் எடுத்து வீசும் விதத்தை பார்த்து, வெகு தொலைவில், உள்ளவர்கள் அதனைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். இந்த வீடியோவில் அந்த நபருக்கு அருகில் பாம்புகள் குவியல் குவியலாக உள்ளது. இதில் ஒருவர் காரில் இருந்து இறங்கி மலை பிரதேசம் போல் தோன்றும் அந்த இடத்தில்,  சாலையை தாண்டி செல்வதை வீடியோவில் நீங்கள் காண்பீர்கள். அங்கு நூற்றுக்கணக்கான பாம்புகள் படையெடுத்து வருவதைக் காணலாம். அந்த நபர் அவற்றை குவியல் குவியலாக அள்ளி பள்ளத்தில் வீசுகிறார். மறுபுறம், சிலர் அந்த நபரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்புகள் தொடர்பான இந்த வீடியோ இன்று விலங்குகள் animalsinthenaturetodayஎன்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது பயனர்கள் இதனை பார்த்து விட்டு மிக வியப்புடம் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News