'களத்திற்கு தயார்' - Instagram மூலம் தெரிவித்தார் அஸ்வின்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jul 28, 2018, 04:46 PM IST
'களத்திற்கு தயார்' - Instagram மூலம் தெரிவித்தார் அஸ்வின்! title=

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முன்னதாக டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது. இதனையடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று இந்தியாவினை பழிதீர்த்துக் கொண்டது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் நாள் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது.

முன்னதாக இங்கிலாந்து அணியுடன் நடைப்பெற்ற Essex பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் காயமடைந்தார் எனவும், இதன் காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் எனவும் தகவல்கள் வெளியானது.

 

Just comfortably numb at the crea  #essex #uk #indvseng

A post shared by Ravichandran Ashwin (@rashwin99) on

இந்நிலையில் தான் நளமுடன் இருப்பதாகவும், நடைப்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் முழுத்திறனுடன் விளையாடுவேன் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பதில் அளித்துள்ளார் அஸ்வின்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு குல்தீப், யாதவ் என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் கிடைத்தப் போதிலும், ரவிச்சந்திரன் அஸ்வினின் இடைவெளி இந்தியாவிற்கு பெரும் இழப்பாகவே அமைந்தது என்பதை சமீபத்திய போட்டிகளில் பார்க்கலாம். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள தொடரில் அவரது பெயர் அறிவிக்கப்பட்டும், காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியானது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது!

Trending News