இந்தியாவின் டாப் 5 பணக்கார பெண்கள்!

ஆண்களை காட்டிலும் பெண்கள் பல துறைகளில் சாதித்து திறமையானவர்களாக இருக்கின்றனர்.

1 /5

 ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார பெண்மணி ஆவார், இவரது தந்தை ஷிவ் நாடாருக்கு பிறகு ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ரூ.36,800 கோடி சொத்து மதிப்புடன் இவர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார பெண்மணியாக திகழ்ந்து வருகிறார்.

2 /5

ஸ்மிதா வி கிருஷ்ணா ரூ.31,400 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்மணியாக திகழ்கிறார். இவர் கோத்ரெஜ் பேரரசின் மூன்றாம் தலைமுறை வாரிசாவார். இவர் சமீபத்தில் தெற்கு மும்பையில் உள்ள மெஹ்ராங்கிர் என்கிற பங்களாவை ரூ.372 கோடிக்கு வாங்கியுள்ளார்.

3 /5

கிரண் நாடார் ரூ.25,100 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் மூன்றாவது பணக்கார பெண்மணியாக திகழ்கிறார். இவர் ஷிவ் நாடாரின் மனைவி மற்றும் ரோஷினி நாடாரின் தாயார் ஆவார்

4 /5

கிரண் மஜூம்தார் ஷா ரூ.18,500 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் நான்காவது பணக்கார பெண்மணியாக திகழ்கிறார். பயோகானின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கிறார், மேலும் இவர் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வென்றுள்ளார்.

5 /5

தேஷ்பந்து குப்தாவின் மனைவி மஞ்சு தேஷ்பந்து குப்தா லூபினின் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கிறார். ரூ.18,000 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது பணக்கார பெண்மணியாக திகழ்கிறார்.