Coconut: ஆன்மீகம், ஆரோக்கியம் இரண்டிற்கும் உகந்த தேங்காய்...!!!

இது கொரோனா காலம். எல்லாரும் தனது நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு நம் சமையல் அறையிலேயே தீர்வு இருக்கிறது. நீங்கள் தினமும் தேங்காய் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல, இன்னும் பல நன்மைகள் உண்டு. 

தினசரி ஒரு துண்டு தேங்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக அதிகரிக்கும். தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. அதோடு, சங்கடங்கள் நீங்க, பிள்ளையாருக்கு  சிதறு தேங்காய் போடுவது இந்துக்களின் வழக்கம். தேங்காய் சுக்கு நூறாய் சிதறுவதைப் போல் பிரச்சனைகளும் சிதறி போகும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த கொரோனா காலத்தில், தேங்காயை அதிகம் உண்டு ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

1 /5

தேங்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. ஏனென்றால், அதில். ஆன்டிவைரல் கூறுகள் உள்ளன. இது நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கும். கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம்.

2 /5

நம் முன்னோர்கள் உணவில் அதிக அளவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தினர்.  தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer's disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3 /5

தாய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் , தேங்காய் பாலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நீங்கள் வேறு எந்த உணவிலிருந்தும் பெற முடியாது. தேங்காய் ஒரு நல்ல ஆண்டிபயாடிக்.  இது உங்களை அனைத்து வகையான ஒவ்வாமைகளிலிருந்தும் அதாவது அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.

4 /5

தேங்காய்க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றால், அது தூய்மையின் உருவமாக கருதப்படுகிறது. மற்ற பழ மரங்களைப் போல் மனிதர்கள் அல்லது பறவைகள் கடித்து போட்ட கொட்டையிலிருந்து வளருவதில்லை.  முழுமையான தேங்காயிலிருந்து தென்னங்கன்று வளர்க்கப்படுகிறது. அதனுடைய இளநீரும் கைபடாமல் இருக்கிறது. அதனால் அது தெய்வத்திற்கு படைக்க உகந்த பொருளாக  கருதப்படுகிறது.

5 /5

தேங்காய் ஒரு நல்ல ஆண்டிபயாடிக்.  இது உங்களை அனைத்து வகையான அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.தேங்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.