அதிக வியர்வையால் அவதியா? இயற்கையான தீர்வுகள் இதோ

வியர்வை பிரச்சினை: வியர்வை என்பது இயற்கையாக நம் உடலில் வெளிப்படும் நீராகும். கோடையில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், இது அதிகமாக வெளியேறும். உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த, வியர்வை துளைகள் வழியாக வெளியேறுகிறது. 

இதனால் உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு அழுக்குகளும் எளிதில் வெளியேறுகின்றன.  ஆகையால்தான் வியர்வை ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் வியர்வை அதிகமாக வெளியேறினால் அது பிரச்சனைக்கு காரணமாகிவிடும். 

1 /5

அதிகப்படியான வியர்வை காரணமாக உடல் துர்நாற்றம் தொடங்குகிறது. அதை போக்க சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /5

யோகா: அதிகமாக வியர்ப்பவர்களுக்கு யோகா சிறந்த தேர்வாக இருக்கும். தினமும் யோகா செய்வதன் மூலம் வியர்வை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வியர்வையைக் கட்டுப்படுத்த இது ஒரு இயற்கையான வழி. 

3 /5

பருத்தி ஆடைகள்: கோடை காலத்தில் வியர்ப்பது சகஜம், ஆனால் அதிக வியர்வையை தவிர்க்க பருத்தி ஆடைகளை அதிகம் அணியுங்கள். பருத்தி ஆடைகள் டி-சர்ட்கள், குர்தாக்கள், பேன்ட்கள் வியர்வையை உறிஞ்சி, உடலுக்கு அசௌகரியம் ஏற்படாமல் தடுக்கும். 

4 /5

காபி: அதிகமாக வியர்ப்பதைக் கட்டுப்படுத்த விரும்பினால், காஃபினைத் தவிர்க்கவும். இதனால் அதிக வியர்வை ஏற்படுகிறது. டீ-காபியை மிகக் குறைந்த அளவில் குடிக்கவும். நீங்கள் அதிகமாக தேநீர் குடித்தால், அதை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

5 /5

பழச்சாறு: கோடையில் ஜூஸ் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இதனால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். பழச்சாறு வியர்வை பிரச்சனையிலிருந்தும் விடுபட உதவும். இது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி குளிர்ச்சியாக வைக்கிறது.