அமீரகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்: 'பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்' என பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுரை

Flu Cases in UAE: இந்த காய்ச்சல் விரைவாக பரவக்கூடியது என்பதால், காய்ச்சலில் உள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என மருத்துவர்கள் பெற்றொருக்கு அறிவுறுத்துகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 17, 2022, 07:11 PM IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல்.
  • பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
  • தடுப்பூசி செலுத்திக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமீரகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்: 'பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்' என பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுரை  title=

ஐக்கிய அரபு அமீரகத்தில் குழந்தைகள் இடையே அதிகரித்து வரும் காய்ச்சல் பீதியை கிளப்பியுள்ளது. குளிர்காலம் துவங்கும் நிலையில், குழந்தைகள் காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த காய்ச்சல் விரைவாக பரவக்கூடியது என்பதால், காய்ச்சலில் உள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என மருத்துவர்கள் பெற்றொருக்கு அறிவுறுத்துகிறார்கள். வரவிருக்கும் விடுமுறை நாட்களில் பலர் குழந்தைகளுடன் பயணிக்கும் எண்ணத்தில் உள்ளதால், தங்கள் குழந்தைகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி போடுமாறு பெற்றோர்களை அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். காய்ச்சல் தடுப்பூசி என்பது மருத்துவர்களின் கூற்றுப்படி, தீவிரம், காய்ச்சல் வரும் விகிதம் மற்றும் அவற்றால் வரும் சிக்கல்களைத் தவிர்க்க ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். 

குளிர்காலம் துவங்கியுள்ளதால், காய்ச்சல், இருமல், சளி, உடல்வலி, தளர்வு, வாந்தி, சுவாசப் புகார்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு அதிக அளவில் வருகின்றனர். . காய்ச்சல் மற்றும் ஆர்எஸ்வி தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. மேலும், கோவிட்-19 கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்பட்டுள்ளன. இன்ஃப்ளூயன்ஸாவின் அபாயத்தைக் குறைக்க விரும்பும் பயணிகள், புறப்படுவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தடுப்பூசி போடுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆரோக்கியமான குழந்தைகளில் பெரும்பாலான இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்கள் தாமாக சரி ஆகிவிடுவதுண்டு. தீவிரம் அதிகம் உள்ள சந்தர்ப்பங்களில், வைரஸ் தடுப்பு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பாலும், சந்தேகத்திற்கிடமான இன்ஃப்ளூயன்ஸா நிகழ்வுகளில், இது அறிகுறி சிகிச்சையாகவே உள்ளது. ஆனால் தீவிரமான சந்தர்ப்பங்களில் அல்லது குழந்தைகளுக்கு பிற ஆபத்துகள் இருந்தால், உங்கள் குழந்தை இன்ஃப்ளூயன்ஸா ஏ பாசிட்டிவ் ஆக இருந்தால், அவர்களுக்கு விரைவான வைரஸ் தடுப்பு மருந்துகளுடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

காய்ச்சல் மற்றும் பிற வைரஸ் தொற்று அறிகுறிகளை எவ்வாறு வேறுபடுத்துவது?

மேலும் படிக்க | NRI News: அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமா? 

காய்ச்சல் மற்றும் பிற வைரஸ் நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட ஒன்றாகத் தான் இருக்கும் என மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.

இருப்பினும், வேறுபடுத்தும் காரணி என்னவென்றால், காய்ச்சலில், குழந்தைகளுக்கு அதிக அளவு காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், குளிர் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும். 

கடந்த இரண்டு வாரங்களில் ஏராளமான குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற வைரஸ் தொற்றுகளை வேறுபடுத்துவது பெற்றோருக்கு சற்று கடினமாக உள்ளது என்றும் அமீரக மருத்துவர்கள் கூறியுள்ளனர். காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் அதிக காய்ச்சல், இருமல் மற்றும் காய்ச்சலுடன் சேர்ந்து வாந்தி மற்றும் மிகக் குறைவான உணவு உட்கொள்ளல் ஆகியவை ஆகும். எனினும், இப்போது அனைத்து கிளினிக்குகளிலும் இன்ஃப்ளூயன்ஸாவைக் கண்டறிய விரைவான சோதனைக்கான கிட் உள்ளது என்றும் இவை பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். 

தங்கள் குழந்தையின் பொதுவான நிலை மோசமாகிக்கொண்டிருக்கும்போதும், அறிகுறிகளைக் கையாள முடியாவிட்டால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

முதல் 48 மணி நேரத்திற்குள் மருத்துவரை அணுகுவது நல்லது. அதிக நேரம் காத்திருப்பதற்குப் பதிலாக, பெற்றோர்கள் விரைவாக தொழில்முறை உதவியை நாட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

'முதல் 48 மணி நேரத்திற்குள் குழந்தை மருத்துவரை சந்திப்பது உகந்தது. காய்ச்சலைக் கட்டுப்படுத்த குழந்தைக்குப் பயன்படுத்தக்கூடிய அனைத்து மருந்துகளையும் குடும்பத்தினர் அறிந்திருக்க வேண்டும். இதில் மருந்தளவு, எவ்வளவு நேரத்தில் கொடுக்க வேண்டும் என்ற விவரம் மற்றும் முரண்பாடுகள் ஆகியவை அடங்கும். அனைத்து அறிவுறுத்தல்களும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான காய்ச்சல் லேசானது முதல் மிதமானது என்றும் இவை  சிகிச்சையால் சரி ஆகக்கூடியவை என்றும் கூறியுள்ள மருத்துவர்கள் இதனால் பெற்றொர் பீதி அடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

அபுதாபி மருத்துவர் ஒருவர், 'குழந்தைகள் கைகளை கழுவாமல் கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடும் வாய்ப்பு இருப்பதால், காய்ச்சல் போன்ற நோய்கள் குழந்தைகளிடையே விரைவாகப் பரவுகின்றன. குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் நல்ல கை சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். குழந்தைகள் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது சுவாச நோய்கள் விரைவில் பரவுவதால், அவர்கள் குணமடையும் வரை வீட்டிலேயே இருப்பது நல்லது' என கூறியுள்ளார். 

நிலைமையை கட்டுப்படுத்த ஒரே பயனுள்ள வழியாக இருப்பதால் தடுப்பூசி செலுத்திக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் படிக்க | ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News