இலங்கையை ஒரு வாரம் முடக்குவது தொடர்பில் அரச உயர் மட்டங்கள் அவசர ஆலோசனை

எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி மற்றும் தேக்க நிலைமை நீடிப்பதை அடுத்தே நாட்டை முடக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 17, 2022, 02:05 PM IST
  • அரச உயர்மட்டங்கள் அவசர ஆலோசனை
  • மக்கள் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி
  • இலங்கைக்கு கடன்கொடுத்த சர்வதேச நிதியங்கள்
இலங்கையை ஒரு வாரம் முடக்குவது தொடர்பில் அரச உயர் மட்டங்கள் அவசர ஆலோசனை title=

கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து உள்ளன. இதில் இலங்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் அந்நாடு இன்று நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. உணவுப்பொருள் கிடைக்கவில்லை, எரிபொருள் கிடைக்கவில்லை, அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத விலையேற்றம், அந்நியச் செலாவணி பற்றாக்குறையை மிகவும் கடுமையாக எதிர்கொண்டுள்ளது இலங்கை. அத்துடன் நாட்டில் மின்வெட்டு தொடர்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு இலங்கை நட்பு நாடுகளின் உதவியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் கோத்தபய, ராஜகபக்சே குடும்பத்தினர்தான் என பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி, இலங்கையில் மிக முக்கியமான அனைத்து இடங்களிலும் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீவிரமான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காண்பதற்கு முதலில் நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உலக நாடுகள், ஐநா போன்றவை கோரிக்கை வைத்துள்ளது. அத்துடன் பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் பதவி விலக மறுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Srilanka Crisis: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையும் குடும்ப அரசியலும்...

அதேபோல் இலங்கைக்கு கடன்கொடுத்த சர்வதேச நிதியங்கள், உலக வங்கி போன்றவை கடனை திருப்பிச்செலுத்த இலங்கையை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், கடனுக்கான வட்டியைக்கூட செலுத்த முடியாத நிலையில் இலங்கை தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இலங்கையை ஒரு வாரம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டங்கள் அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது நாட்டை ஒருவார காலம் முடக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது என்று அறிய முடிகின்றது.

எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி மற்றும் தேக்க நிலைமை நீடிப்பதை அடுத்தே நாட்டை முடக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. மேலும் ஒரு வாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளைச் சீர் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால், இன்று மாலை அது தொடர்பான அறிவித்தல் வெளியாகலாம் என்று அரச உயர்மட்டங்களைச் சுட்டிக்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News