பலரது உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி ஓட்டுநர்!

மத்திய பிரதேச மாநிலம் நரஸிங்கப்பூர் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது!

Last Updated : Mar 26, 2018, 04:08 PM IST
பலரது உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி ஓட்டுநர்! title=

மத்திய பிரதேச மாநிலம் நரஸிங்கப்பூர் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது!

மத்திய பிரதேச மாநிலம் நரஸிங்கப்பூர் பகுதியில் பங்கிற்கு பெட்ரோல் இறக்கிக் கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் வாகன ஓட்டுநர் அதிரிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார்.

நேற்று இரவு நடந்த இச்சம்பவத்தில் தீ காயங்களுடன் உயிர்தப்பிய வாகன ஓட்டுநடை, ஊர் போதுமக்கள் மீட்டு அருகாமையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பெட்ரோல் பங்கினில் பெட்ரோல் இறக்குகையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், வாகம் தீப்பிடித்த உடன் ஓட்டுநர் வாகனத்தில் இருந்து இரங்காமல் பெட்ரோல் பங்கிற் தொலைவில் வாகனத்தினை எடுத்துச் சென்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை, இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News