சௌந்தரபாண்டியனால் பதறும் குடும்பம்-அண்ணா சீரியலில் நடக்க இருப்பது என்ன? அப்டேட் இதோ!

Anna Serial Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

Written by - Yuvashree | Last Updated : Feb 19, 2024, 04:47 PM IST
  • தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் அண்ணா.
  • இன்றைய எபிசோடில் பல ட்விஸ்டுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
  • அவை என்னென்ன தெரியுமா?
சௌந்தரபாண்டியனால் பதறும் குடும்பம்-அண்ணா சீரியலில் நடக்க இருப்பது என்ன? அப்டேட் இதோ! title=

Zee Tamil Anna Serial Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கி கல்யாணம் ஆகி போனது மறந்து இசைக்கு காபி கொண்டு வா என்று கூப்பிட பரணி காபியை கொண்டு வந்து கொடுக்க நீ கொடுக்கிற காப்பியை குடிக்க மாட்டேன் என்று தட்டி விடுகிறான். 

இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் இசக்கி முத்து பாண்டிக்கு காபி எடுத்துக் கொண்டு வைக்க ரத்னா இருக்க வேண்டிய இடத்தில் நீ இருக்க நீ எல்லாம் எனக்கு காபி கொண்டு வரியா என்று திட்டி அனுப்புகிறான். பிறகு பாக்கியம் என்ன ஆச்சு என்ன சொன்னான் என்று கேட்க இசக்கி நடந்த விஷயத்தை சொல்கிறாள். 

என்ன பண்றது பொம்பளைங்க வாழ்க்கையே இப்படித்தான் எனக்கும் பிடிக்காமல் தான் இந்த வாழ்க்கை அமைந்துவிட்டது. அதே மாதிரி தான் போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்கிறாள். என் புருஷனை விட உன் புருஷன் நல்லவன் தான். அவனை எப்படியாவது அவங்க அப்பா கிட்ட இருந்து பிரிச்சுடு அப்புறம் எல்லாம் நல்லபடியா மாறும் என்று அட்வைஸ் கொடுக்க இதை பாண்டியம்மா பார்த்து விடுகிறாள். 

மேலும் படிக்க | சீதாவை சிக்க வைக்க நான்ஸி போடும் திட்டம்! சீதா ராமன் சீரியல் அப்டேட்!

இந்த விஷயத்தை சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டியிடம் சொல்ல அவர் அப்படித்தான் என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு என்று ரகசியமாக ஒரு விஷயத்தை சொல்கிறார். அப்படியே மறுபக்கம் சண்முகம் சூடாமணியை வந்து ஜெயில் சந்தித்து இசக்கிக்கு கல்யாணமான விஷயம், பஞ்சாயத்தில் நடந்தது என அனைத்தையும் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்.

உன்னை நம்பி என் பொண்ணுங்கள விட்டுட்டு வந்தேனே என் முகத்திலேயே முழிக்காத போடா என்று கோபப்பட்டு கிட்டி அனுப்பி விடுகிறார். இதனால் சண்முகம் மனம் உடைந்து போகிறான். வீட்டில் சண்முகத்தை காணாததால் எல்லோரும் பதறி போய் தேடத் தொடங்குகின்றனர். பரணிக்கும் தகவல் கொடுக்க அவளும் அதிர்ச்சியாகி சண்முகத்தை தேடி அலைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய்: தப்பித்த சுடர்... டார்ச்சர் செய்து தவிக்க விடும் குழந்தைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News