அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 30, 2023, 11:53 AM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா.
  • இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி title=

அண்ணா சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அதன்படி அண்மையில் தொடங்கபிபட்ட சீரியல் தான் "அண்ணா". 

அண்ணா: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. நேற்றைய எபிசோடில் ஷண்முகம் குளிப்பதை பரணி பார்த்து விட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: கைதாகும் சூர்யா.. அதிர்ச்சியில் சீதா, ஆட்டத்தை தொடங்கும் மகா!!

அதாவது, பரணி ஷண்முகம் குளிப்பதை பார்த்தது மட்டுமில்லாமல் வீடியோவையும் எடுக்க செந்தில் அதிர்ச்சி அடைகிறான். இந்த நேரம் பார்த்து வெட்டுக்கிளி வந்து இந்தா அண்ணே, அந்த மூணாவது செடிக்கு தண்ணி ஊற்றும் போதே துண்டு அவிழ்ந்துடிச்சு என்று சொல்லி டவலை கொடுக்க ஷண்முகம் வெக்கப்பட்டு ஓடுகிறான். 

மறுபக்கம் வைகுண்டம் தனியாக உக்கார்ந்து இருக்க அவரது அக்கா பாக்கியம் நீ இப்படி குடிச்சிட்டு இருக்கறதுனால தான் இந்த குடும்பம் இப்படி கஷ்டப்படுது, நீ ஒழுங்கா இரு என அறிவுரை வழங்க வைகுண்டம் தனது வலியை சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது ஷண்முகம் அங்கு வந்து அப்பாவை விட்டு கொடுக்காமல் பேசி அவருக்கு விருப்பப்பட்ட மாதிரி இருக்கட்டும் என சொல்ல உங்கப்பா இப்படி இருக்க நீ குடுக்கற இடம் தான் காரணம் என்று பேசுகிறாள்.

அதன் பிறகு வெட்டுக்கிளி தேங்காய் உரித்து கொண்டே சண்முகத்தை பார்த்து பார்த்து சிரிக்க பரணியும் இதை பார்த்து சிரிக்க ஷண்முகம் தங்கைகள் எதுவும் புரியாமல் பார்க்க வீரலட்சுமி என்ன ஆச்சு என்று வெட்டுக்கிளியிடம் கேட்க அவன் நடந்த விசயத்தை சொல்ல அது எல்லா தங்கைகளுக்கு தெரிந்து எல்லாரும் சிரிக்க ஷண்முகம் கோபப்பட்டு வெளியே போக அந்த நேரம் பார்த்து அவனது அத்தை பாக்கியமும் வர அவளும் விசியத்தை கேட்டு சிரித்து விட்டு பரணியிடம் வீடியோவை டெலீட் பண்ண சொல்கிறாள்.அவளும் சண்முகத்தை கலாய்த்து விட்டு வீடியோவை டெலீட் செய்கிறாள். 

பிறகு பாக்கியம் சண்முகத்தை தனியாக அழைத்து உன் தங்கச்சிக்கு நல்லபடியா கல்யாணம் பண்ற வேலையை பாரு என சொல்ல உன் வீட்டுல ரெண்டு பையன் இருக்கானுங்க என் தங்கச்சிகளை கட்டிக்கிட்டு போகணும்னு உனக்கு தோணவே இல்லயா என கேட்க பாக்கியம் ஷாக் ஆகிறாள், ஷண்முகம் கிளம்பி சென்றதும் நீ உன் தங்கச்சிகளை மல்லி பூ மாதிரி வளர்த்து வச்சிருக்க, என் புள்ள கொலைகார பாவி, அவனுக்கு கட்டி வச்சி கஷ்டப்பட வேணாம்னு வருந்துகிறாள். 

இதனை தொடர்ந்து பாக்கியத்தின் முதல் மகன் முத்துப்பாண்டி அறிமுகமாகிறான். போலீஸான முத்துப்பாண்டி ஆளில்லாத காட்டில் ஒரு அப்பாவியை ஓட விட்டு என்கவுண்டர் செய்து போலீசை தாக்கியதால் என்கவுண்டர் செய்து விட்டதாக பத்திரைக்குக்கு தகவல் கொடுக்க சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News