ஜீ ஸ்டுடியோஸுடன் கை கோர்க்கும் நயன் - வெளியானது 75ஆவது பட அறிவிப்பு

நயன்தாராவின் 75ஆவது திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 12, 2022, 01:35 PM IST
  • நயன்தாரா தற்போது ஜவான் படப்பிடிப்பில் இருக்கிறார்
  • நயனின் 75ஆவது படத்தை தயாரிக்கிறத் ஜீ ஸ்டுடியோஸ்

Trending Photos

ஜீ ஸ்டுடியோஸுடன் கை கோர்க்கும் நயன் - வெளியானது 75ஆவது பட அறிவிப்பு title=

ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகைகள் வரிசையில் இணைந்தார். தொடர்ந்து விஜய், அஜித் ஆகியோருடன் வெற்றி படங்களில் தனது இடத்தை நிலையாக பிடித்தார்.

ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களால் சிறிது காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அதன் பிறகு ராஜா ராணி படம் ரீ எண்ட்ரி கொடுத்து நயன் தனது பாய்ச்சலை அசுர வேகத்தில் செலுத்தினார். தொடர்ந்து அவர் நடித்த படங்களும் ஹிட்டடித்தன. அதுமட்டுமின்றி சிறந்த கதைகளைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் எடுத்தார்.

மேலும் படிக்க | நா. முத்துக்குமார் - மழை நின்ற பிறகும் தூறிக்கொண்டிருப்பவர்

அந்தச் சமயத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அவர்கள் இருவருக்கும் காதல் உருவானது. பல வருடங்கள் காதலித்து வந்த இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

மகாபலிபுரத்தில் நடந்த திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட்வரையிலான பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு தாய்லாந்து சென்ற அவர் தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார்.

Nayan Marriage

இந்நிலையில் நயன்தாராவின் அடுத்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸும், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கிறது. நயனின் 75ஆவது படமாக அமையவிருக்கும் இதனை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்.இதில் ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கின்றனர். படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு விரைவில் நடக்கவிருக்கிறது.

படம் குறித்து பேசிய நிலேஷ் கிருஷ்ணா, “எனது முதல் படத்தை ZEE Studios, Trident Arts ஆகிய இரண்டு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக, உணர்கிறேன். நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக்  கதையில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் திருமதி நயன்தாரா ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது . 

 

இது அவரது 75ஆவது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை  காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனத்துடன்  உள்ளேன். திரைப்படத் உருவாக்கத்தை கற்று தந்த எனது குரு, என் ஆன்மா இயக்குனர் ஷங்கர் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது” என்றார்.

மேலும்  படிக்க | விக்னேஷ் சிவன் - நயன்தாராவை சந்தித்த பாலிவுட் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்

அவரைத் தொடர்ந்து பேசிய  ZEE Studios தென்னக தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால், "லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் இந்த மதிப்புமிக்க படத்தில் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

இருபது ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் நயன்தாரா உடைய நடிப்பில் , திறமையான நிலேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்படும் இந்தத் திரைப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. Zee Studiosல், மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் சிறந்த கதைகளை உருவாக்குவதே எங்களது நோக்கம். இந்த படம் அதில் ஒரு சிறந்த படியாக அமையும்” என்று பேசினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News