செல்ஃபிக்காக இப்படியா? படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள் செய்த செயல்

மலேசியாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை காண ரசிகர்கள் கூட்ட கூட்டமாக திரண்டனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 9, 2023, 07:18 AM IST
  • விஜய் சேதுபதி 51 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
  • மகாராஜா விஜய் சேதுபதியின் 50-வது படமாகும்.
  • விஜய் சேதுபதி51 பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்.
செல்ஃபிக்காக இப்படியா? படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள் செய்த செயல் title=

விஜய் சேதுபதி51 பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ: மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறிவிட்டார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் இப்போது தனது திறமையால் உயர்ந்து பல ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இவர் வில்லனாகவும் சில படங்களில் நடித்து மிரட்டியுள்ளார். ரசிகர்கள் பலருக்கும் இவரை கதாநாயகனாக பார்ப்பதை விடவும் வில்லனாக பார்ப்பது தான் பிடித்திருக்கிறதாம். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தவர் தற்போது 50 படங்களின் மைல்கல்லை எட்டியுள்ளார்.

அந்தவகையில் தற்போது இவர் விஜய் சேதுபதி 51 படத்தில் தற்போது நடித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிற படத்தின் இயக்குனர் ஆறுமுக குமாருடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த திரைப்படத்தில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் இணைந்து யோகி பாபு மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். தற்போது இந்த திரைப்படத்தின் பூஜை கடந்த மே மாதம் 19 ஆம் தேதி மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்த படத்திற்கு 7Cs என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | கடுப்பான லோகேஷ் கனகராஜ்! சமாதானம் செய்வாரா விஜய்?

இந்நிலையில் தற்போது மலேசியாவில் நடந்த சம்பவம் இன்று வைரலாகி வருகின்றது. அந்த வகையில் மலேசியாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை காண ரசிகர்கள் கூட்ட கூட்டமாக திரண்டனர். இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி வழக்கம்போல் தனது ரசிகர்களுடன் கைகுலுக்கி, அவர்களோடு செல்ஃபி எடுத்து, பேசி உற்சாகப்படுத்தினார். இந்த புகைப்படங்களும், வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ…

தற்போது நடிகர் விஜய் சேதுபதி  'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. நித்திலன் சுவாமிநாதன்-விஜய் சேதுபதி இணையும் இந்த புதிய படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'மகாராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தமன்னாவிற்கு ஜெயிலர் ஷூட்டிங்கில் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News