விதிப்படிதான் எல்லாம் நடக்கும்... கண்ணீர் மல்க பேட்டியளித்த டி.ராஜேந்தர்!

நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக இன்றைய தினம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jun 14, 2022, 08:12 PM IST
  • மகன் சிலம்பரசன் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் நான் ஒப்புக் கொண்டேன்
  • படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு தாய் தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான்
விதிப்படிதான் எல்லாம் நடக்கும்... கண்ணீர் மல்க பேட்டியளித்த டி.ராஜேந்தர்!  title=

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக இன்றைய தினம் அமெரிக்கா புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர்,

என் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் எனது உடல் நலம் பற்றி நல்லபடியாக செய்தி போட்ட ஊடகதினருக்கு முதல் நன்றி. இன்று செய்தியாளர்களை சந்திக்கும் எண்ணம் எனக்கில்லை. எனது பி.ஆர்.ஓ சொன்னதன் காரணமாக இன்று நான் உங்களை சந்தித்து செல்கிறேன்..

நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. என் முகத்தில் தான் தாடி வைத்து இருக்கிறேன். என் வாழ்க்கையில் எதையும் மூடி வைத்தது இல்லை..

நான் இன்றுதான் அமெரிக்கா செல்கிறேன். அதற்கு முன்னதாகவே பல கதைகளை அடைத்து நான் அமெரிக்கா சென்று விட்டதாக குறிப்பிட்டார்கள்... நானே ஒரு நடிகன் இயக்குனர் எனக்கே கதை எழுதி திரையிட முயற்சிக்கின்றனர்..

T rajendar

விதியை மீறி எதுவும் நடக்காது, எனக்காக பிரார்த்தனை செய்த கட்சிக்காரர்கள், என் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் என்னுடைய விசுவாசிகளாக இருக்கும் அனைவருக்கும் நன்றி...

என் உடல்நிலை சரியில்லாத போது நேரில் வந்து என்னை சந்தித்த முதல்வர், ஜி கே வாசன் பச்சைமுத்து, மற்றும் கமலஹாசன், ஐசரி கணேசன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி..

ராமச்சந்திரா மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் என் மீது காட்டிய அன்பிற்கு அளவே இல்லை அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

எல்லாவற்றையும் விட என் தாய் கழகம் திமுக தலைவர் தற்போதைய முதல்வர் அன்பை காட்டி பாசம் காட்டி தோள் தட்டி  என்னை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் இரண்டாவது முறையாகவும் குடும்பத்தினரோடு வந்து என்னை நேரில் சந்தித்து அன்பையும் ஆதரவையும் காட்டியபோது எனக்குத் தோன்றியது என் மீது அன்பு காட்டுவார் என்று கலைஞரை மட்டுமே எதிர்பார்த்தேன் ஆனால் இப்போது அவரது மகன் ஸ்டாலின் காட்டியதும் உயர்ந்த விட்டேன் அவர் மீது இன்னும் மதிப்பு எனக்கு அதிகமாகியிருக்கிறது..

மேலும் படிக்க | மறுவீடு சென்ற நயன்தாரா... கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரல்

உலகத்தில் வாழக்கூடிய அனைத்து ஈழத்தமிழ் மக்கள் இருக்கும் வரையிலும் என்னைப் பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம் நான் மேல் சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன்...

நான் இன்று வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கான காரணம் எனது மகன் சிலம்பரசன் தான் அவன் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் நான் ஒப்புக் கொண்டேன் , அவனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு தாய் தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான்..

பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் என் மகன் பெற்றோர்களுக்காக கடின உழைப்பு செய்து வருகிறார் இப்படி ஒரு மகனை பெற்றதற்கும், குருவாக இருந்து ஒரு நல்ல சிஷியனை உருவாக்கியதற்கு  நான் பெருமைப்படுகிறேன் என இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News