சூழ்ச்சியை முறியடித்து வெற்றி பெறும் சண்முகம்! அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்

Zee Tamil Anna Serial August 12th Episode Update: சொந்தரபாண்டி செய்யும் சூழ்ச்சி... சண்முகத்துக்கு கிடைத்த வெற்றி அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 12, 2023, 01:20 PM IST
  • சொந்தரபாண்டி செய்யும் சூழ்ச்சி
  • சண்முகத்துக்கு கிடைத்த வெற்றி
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
சூழ்ச்சியை முறியடித்து வெற்றி பெறும் சண்முகம்! அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் title=

ANNA Serial Zee TV: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம், சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி, பரணி, பாக்கியம் என எல்லாரும் ஒரே கோவிலில் கூட்டியிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

சௌந்தரபாண்டி AKS குடும்பத்தாருக்கு போன் செய்து தட்சணாமூர்த்தி கோவிலுக்கு பின்புறம் வர சொல்ல அவர்களும் வருகின்றனர். அந்த நேரம் பார்த்து முத்துப்பாண்டி பைத்தியக்கார பெண்ணுக்கு பயந்து சுவரில் முட்டியபடி முகத்தை மறைத்து கொண்டு நின்றிருக்க இதை பார்த்து ஏன் என்னாச்சு என்று கேட்க சௌந்தரபாண்டி அது ஒரு வித பிராத்தனை என்று சொல்லி சமாளிக்க அதை கேட்ட AKS மனைவி தனது மகனிடம் அப்படினா நீயும் அதை பானு என்று சொல்லி பண்ண வைக்கிறார். 

தொலைகாட்சி சீரியல்களில் வித்தியாசமான காட்சியமைப்புக் கொண்ட சீரியலாக அண்ணா தொடர் பார்க்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி அவர்களிடம் பரணிக்கு அவ காதலிக்கிற பையனோடு தான் கல்யாணம் என்று எல்லா ஏற்பாடுகளையும் பண்ண போறேன், கடைசி நொடியில் அவ கழுத்தில் தாலி கட்ட போறது உன் மகன் தான் என்று சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் கல்யாணம் பற்றி யாரிடமும் எதுவும் சொல்ல கூடாது,  நானும் எங்க வீட்டில் சொல்லாமல் தான் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்கிறார். 

மேலும் படிக்க | சண்முகத்துக்கு செக்மேட் வைக்க முத்துப்பாண்டி போடும் பிளான்...  அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட் 

மறுபக்கம் பாக்கியம் வெங்கடேஷ் குடும்பத்திடம் ரத்னாவை கல்யாணம் செய்து கொள்ளுமாறு பேச ஷண்முகம் உங்க கால்ல கூட விழறேன் என்று சொல்ல ரத்னா நீ கால்ல விழுந்து தான் கல்யாணம் நடக்கணும்னா அப்படியொரு கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறாள். 

பாக்கியம் ரத்னா ரொம்ப நல்ல பொண்ணு, அவளை எங்க குடும்பத்துக்கு பொண்ணு எடுக்கணும்னு ஆசைப்பட்டேன், ஆனால் அது நடக்கல.. அவ உங்க வீட்டுக்கு ஏற்ற நல்ல மருமகளா இருப்பா என்று சொல்ல அவர்கள் கொண்டு வந்திருந்தக மல்லிகை பூவை ரத்னா தலையில் வைத்து நீ தான் டி எங்க வீட்டு மருமகள் என்று சொல்ல இவர்கள் எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | 'ரொம்ப கஷ்டமா இருக்கு.. தப்பா போடாதீங்க’ கணவர் இறப்புக்கு நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரியாக்ஷன்​

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News