டிவிட்டரில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் பாடகி!!

Last Updated : Mar 4, 2017, 11:46 AM IST
டிவிட்டரில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் பாடகி!! title=

திரைப்பட பாடகி சுசித்ராவின் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகர், இசையமைப்பாளர், நடிகைகளின் ஆபாச கோல காட்சிகள் வெளிப்படித்தி உள்ளன. 

சக பாடகியான சின்மயி போன்றோர், சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவரும் நிலையில், தொலைக்காட்சி சேனல்கள் சிலவற்றுக்கு அளித்த பேட்டியில், தனது டிவிட்டர் பக்கத்தை முடக்கியதாக சுசித்ரா தெரிவித்தார். 

தேதி, நாள் குறித்து, தினமும் ஒரு பிரபலத்தின் அந்தரங்க வீடியோவை வெளியிட உள்ளதாகவும் டிவிட்டர் அக்கவுண்டில் குறிப்பிட்டுள்ளார் சுசித்ரா. 

அவ்வப்போது சுசித்ரா வெளியிட்டுவரும் டிவிட்டர் தகவல்கள் நெட்டிசன்கள் தூக்கத்தை கெடுத்துள்ளது. அடுத்து எந்த பிரபலத்தின் போட்டோ அல்லது வீடியோ வருமோ என்ற எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள் உள்ளனர். 

இந்நிலையில், சுசித்ராவின் டிவிட்டர் அக்கவுண்ட் பூட்டு போடப்பட்டது. அதாவது ஏற்கனவே அவரை ஃபாலோ செய்வோர் மட்டுமே அவரது டிவிட்டுகளை பார்க்க முடியும். 

இந்த இடைவெளியில் சுசித்ரா வெளியிட்ட டிவிட்டுகள் சில நேரடியாக ஒரு பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் மீது பாலியல் புகார் கூறுவதாக இருந்தது. இதுவரை அவர் வெளியிட்ட டிவிட்டுகள் இரு தரப்பு சம்மதத்துடன் நடந்த பாலியல் நடவடிக்கை என கூறப்பட்டிருந்த நிலையில், இந்த ஒரு டிவிட் பலாத்காரம் என நேரடியாக குற்றம்சாட்டியது. 

ஒரு பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளருடன் பார்ட்டியில் பங்கேற்றதாகவும், அப்போது தான் அருந்திய பானத்தில் மருந்து கலக்கப்பட்டு தரப்பட்டதாகவும், பிறகு நடந்த அந்த பயங்கர அனுபவத்தை இங்கு கூற முடியாது என்று சுசித்ரா டிவிட் சொல்கிறது. 

இந்நிலையில் இந்த டிவிட்டுகள் மீது போலீஸ் விசாரணை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News