கல்யாண மண்டபத்தில் கார்த்தி! சண்முகத்துக்கு காத்திருந்த ஷாக்! அண்ணா சீரியல் அப்டேட்

Anna Serial Update On 2023 July 01:  - தாலியுடன் ஷாக் கொடுத்த பரணிக்கு வேறொரு ஷாக் காத்துக் கொண்டிருக்கிறது! அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 1, 2023, 11:20 AM IST
  • அண்ணா சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்
  • கல்யாண பொண்ணுக்கு மாப்பிளைமருதாணி வைக்கலாமா?
  • பரணியும் சண்முகமும் டான்ஸ் ஆடி வரவேற்பது ஏன்?
கல்யாண மண்டபத்தில் கார்த்தி! சண்முகத்துக்கு காத்திருந்த ஷாக்! அண்ணா சீரியல் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி வேகமாக கார் ஒட்டி பிரேக் அடிக்க அவளிடம் இருந்த தாலி கீழே விழ ஷண்முகம் அதிர்ச்சி அடைந்தான். 

இதனை தொடர்ந்து அண்ணா தொலைகாட்சி சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லாரும் மண்டபத்துக்கு வந்து இறங்க பெண் வீட்டார் சார்பாக பரணியும் சண்முகமும் டான்ஸ் ஆடி மாப்பிளையை வரவேற்க மாப்பிளை வீட்டு தரப்பில் நான்கு தங்கைகளும் நடனமாடி வர இதனை பார்த்த சண்முகமும் தங்கைகளும் அதிர்ச்சி அடைகின்றனர். 

பிறகு ஷண்முகம் பரணியுடன் தான் போகிறேன் என சொல்லாமல் வந்ததற்காக மன்னிப்பு கேட்டு தோப்புக்கரணம் போட்டு நீங்க எதுக்கு சொல்லாமல் வந்தீங்க என்று கேட்க தங்கைகள் தோப்புக்கரணம் போடுகின்றனர். பிறகு பரணியுடன் போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கலாமே என்று தங்கைகள் கேட்க பரணி எதையோ சொல்லி சமாளிக்கிறாள். 

மேலும் படிக்க | தாலியுடன் ஷாக் கொடுத்த பரணி! அண்ணா சீரியலில் சௌந்தர பாண்டி வைத்த செக்மேட்

பிறகு சௌந்தரபாண்டி போன் செய்ய ஷண்முகம் தனியாக போய் பேச அவர் எதாவது பிரச்சனையா என்று கேட்க ஷண்முகம் அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கார்த்திக் வந்து இறங்க ஷண்முகம் ஐயோ என அதிர்ச்சியாக சௌந்தரபாண்டி என்னாச்சு என்று கேட்க ஒருவழியாக ஒன்றும் இல்லை என்று சொல்லி ஷண்முகம் அவரை சமாளிக்கிறான். 

அடுத்து ஷண்முகம் இவன் எதுக்கு வந்தான் என்று கேட்க பரணி என் ப்ரண்ட் கல்யாணம் அவன் வர கூடாதா என்று சொல்லி மழுப்ப பிறகு மெஹந்தி பங்க்ஷன் தொடங்குகிறது, மாப்பிளையை கல்யாண பொண்ணுக்கு மருதாணி வைத்து விட சொல்கின்றனர். 

அதே போல் பரணி கார்த்தியிடம் நீ எனக்கு மருதாணி வச்சு விடு, என் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கனு பார்க்கலாம் என்று சொல்ல சண்முகமும் அங்கே இருக்க பரணி அவனையும் ஒரு கையில் வைக்க சொல்கிறாள், ரெண்டு பேரில் யார் அதிக பாசம் வச்சிருக்கீங்களோ அவங்களை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்கிறாள். பிறகு ஷண்முகம் தயக்கத்துடன் மருதாணி வைத்து விடுகிறான். 

இன்னொரு பக்கம் மாறுவேடத்தில் வரும் வெங்கடேஷ் ரத்னாவுக்கு மருதாணி வைத்து விடுகிறான். அதனை தொடர்ந்து கொஞ்ச நேரம் கழித்து பரணி கார்த்திக் மருதாணி வைத்த கையை கழுவ மருதானி நன்றாக செவந்து இருக்கிறது, இதனை தொடர்ந்து ஷண்முகம் வைத்த கையை கழுவும் போது கார்த்திக் வைத்ததை விட இன்னும் ஆழமாக செவந்திருக்கிறது. 

இதை பார்த்து கார்த்தி பொஸசிவ் ஆகி உன் முறை பையனையே கல்யாணம் பண்ணிக்க என பரணியை கலாய்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

 மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி.. கண்ணீருடன் சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பரணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News