குளத்தில் மிதக்கும் பாடி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Zee Tamil Anna Serial July 14th 2023 Update: குளத்தில் மிதக்கும் பாடி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 14, 2023, 11:47 AM IST
குளத்தில் மிதக்கும் பாடி.. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் title=

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா காணாமல் போன நிலையில் சௌந்தரபாண்டி வெங்கடேஷை தூக்கி வந்து கட்டி வைத்து அடிக்க அவன் ரத்னா ஓடி போக மாட்டா, அவ உங்க தங்கச்சி, அவ மேல உங்களுக்கு நம்பிக்கையில்லா என்று கேட்டான். 

இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் வீட்டிற்கு போலீஸ் வர சௌந்தரபாண்டியை தனியாக அழைத்து சென்று ஏதோ விஷயம் சொல்ல அவரது முகம் மாற வீட்டில் உள்ள எல்லாரும் பதற்றம் அடைந்தனர், எல்லாரும் என்னாச்சு என்று கேட்க பக்கத்துக்கு ஊரு குளத்துல ஏதோ பாடி கிடக்குதாம் என்று சொல்ல அது ரத்னாவா இருக்காது என்று கலங்குகின்றனர்.

எதுவாக இருந்தாலும் நேர்ல போய் பார்த்தா தானே தெரியும் என சௌந்தரபாண்டி சொல்ல ஷண்முகம் என்ன மாமா இப்படியெல்லாம் சொல்றீங்க என்று வருத்தப்படுகிறான், பரணி அது ரத்னாவா இருக்காது என்று ஆறுதல் கூறுகிறாள். அடுத்ததாக எல்லாரும் மார்ச்சூரிக்கு வர அங்கே பெண்ணை காணவில்லை ஒரு குடும்பமும் மனைவியை காணவில்லை என குடும்பமும் காத்திருக்கின்றனர். 

ஷண்முகம் குடும்பத்தினரும் காத்திருக்க அந்த பெண்ணின் குடும்பத்தினர் எல்லாத்தையும் பண்ண நாங்க உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையானு கேட்காமல் விட்டுட்டோம், உனக்கு பிடிக்கும்னு நினைச்சோமே தவிர உங்கிட்ட கேட்கல என கதறி அழ ஷண்முகம் நானும் என் தங்கச்சிகிட்ட கேட்டு இருக்கனும் என வருத்தப்பட பரணி அவ நல்லபடியா வருவா அப்போ கேளு என்று சொல்கிறாள். 

அடுத்ததாக பொண்டாட்டியை காணாமல் நிற்கும் புருஷனும் உன் விருப்பம் இல்லாமலே உன்கூட இவ்வளவு நாள் வாழ்ந்துட்டேன் என்று வருத்தப்பட்டு பேச ஷண்முகம் கலங்கி நிற்கிறான், இன்ஸ்பெக்டர் வந்து உள்ளே போய் பாடியை பாருங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி அவங்க பார்க்கட்டும், அவங்க வீட்டு பொண்ணா இருந்தா நாங்க பாக்க தேவையில்லை, அவங்க வீட்டு பொண்ணு இல்லனா எங்க வீட்டு பொண்ணு தானு கண்பார்ம் ஆகிரும் என்று பேச ஷண்முகம் அது ரத்னாவாகவும் இருக்க கூடாது, அவங்க வீட்டுக்கு பெண்ணாகவும் இருக்க கூடாது என்று கலங்குகிறான். 

அதற்கு அடுத்ததாக இன்ஸ்பெக்டர் வேறொரு குடும்பத்தை உள்ளே அனுப்ப இவர்கள் அவங்க என்ன சொல்ல போறாங்க? அது ரத்னாவாக இருக்குமோ என்ற அச்சத்துடன் இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News