பாயாசத்தில் பாய்சன்.. மாரியின் கர்ப்பத்திற்கு ஆபத்தா? - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரிஇன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 30, 2023, 02:54 PM IST
  • சங்கரபாண்டி ஜோரக்கை சென்று சந்திக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.
  • சூர்யா மற்றும் மாரி இருவரும் கோவிலுக்கு வந்து சித்தரை சந்திக்கின்றனர்.
  • குழந்தை தேவியம்மாவோட மறு உருவமாகவும் தெய்வ சக்தி படைத்ததாகவும் வந்து பிறக்கும்.
பாயாசத்தில் பாய்சன்.. மாரியின் கர்ப்பத்திற்கு ஆபத்தா? - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை மாரி கர்ப்பமாக சூர்யா ஹாஸ்பிடல் இருந்து அவளை வீட்டிற்கு அழைத்து வந்த எல்லோரிடமும் விஷயத்தை சொல்ல தாரா உச்சகட்ட டென்ஷன் அடைந்தாள். இதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மாரி ஹஸ்பண்ட் சார் தன்னை  ஒரு வேலை செய்யவிடாமல் அவ்வளவு நல்லா பாத்துக்கிறார் என்று சொன்ன தாராவிக்கு இன்னும் கடுப்பு அதிகமாகிறது. பிறகு ஜெகதீஷ் அவர்களை இங்கேயே இருக்க சொல்ல சூர்யா இல்ல நாங்க தனியாவே இருந்துக்கிறோம் என்று சொல்லி அங்கிருந்து மாரியை கூட்டிக்கொண்டு கிளம்புகிறான். 

அதைத்தொடர்ந்து தாரா என்ன செய்வது என்று யோசிக்க சங்கரபாண்டி ஜோரக்கை சென்று சந்திக்கலாம் என்று ஐடியா கொடுக்க முதல் மரியாதை இப்பதான் உருப்படியா ஒரு ஐடியா கொடுத்திருக்க என்று சொல்லி தாரா கிளம்பி செல்கிறாள். 

இன்னொரு பக்கம் சூர்யா மற்றும் மாரி இருவரும் கோவிலுக்கு வந்து சித்தரை சந்திக்கின்றனர். அவர் கவலையே படாதீங்க கண்டிப்பா இந்த குழந்தை தேவியம்மாவோட மறு உருவமாகவும் தெய்வ சக்தி படைத்ததாகவும் வந்து பிறக்கும் என்று சொல்ல இதைக் கேட்டு சந்தோஷப்படுகின்றனர்.

அதே நேரம் அப்படியே மறு திசையில் ஜோரக் இந்த குழந்தை கண்டிப்பாக பிறக்கும், அந்த குழந்தை பிறந்ததும் உங்களுடைய அழிவு காலம் தொடங்கும் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். 

பிறகு ஜாஸ்மின் இந்த குழந்தையை இல்லாம பண்ணிடனும் என்று ஐடியா குடுக்க பாயாசத்தில் பாய்சனை கலக்க திட்டம் போடுகின்றனர். ஆசிரியரின் அழைத்து கூட வைத்துக்கொண்டு பாயாசம் செய்து அவளுக்கு தெரியாமல் பாய்சனை கலந்து எடுத்துச் செல்கின்றனர்.

மேலும் படிக்க | உண்மையை உடைத்த டிரைவர்..உச்சகட்ட டென்ஷனில் தாரா! மாரி தொடரில் நடக்கப்போவது என்ன..? 

ஜெகதீஷ் அவர்களை தடுத்து நிறுத்தி எங்கப்பா இங்கே என்று கேட்க ஹாசினி எல்லாவற்றையும் உளறிவிட நீ அவ்வளவு நல்லது கிடையாது அவ்வளவு சீக்கிரம் மனசு மாறமாட்டியே என்று சந்தேகப்படுகிறார் ஜெகதீஷ். உடனே தாரா அந்த பாயாசத்தை குடித்து அதில் எதுவும் கலக்கவில்லை என்பதை நிரூபிக்க பாயாசத்தை குடிக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மாரி’ சீரியல்.

மேலும் படிக்க | ஷண்முகம் எடுத்த அதிரடி முடிவால் முத்துபாண்டிக்கு புல்ஸ்டாப்? அண்ணா சீரியல் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News