முதன்முறையாக கமலுடன் நடிக்கும் நயன்தாரா! அதுவும் இந்த படத்திலா?

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 36 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 19, 2023, 02:06 PM IST
  • விரைவில் முடிய உள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு.
  • அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
  • 36 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைய உள்ளனர்.
முதன்முறையாக கமலுடன் நடிக்கும் நயன்தாரா! அதுவும் இந்த படத்திலா? title=

'இந்தியன் 2' படத்தின் தென்னாப்பிரிக்கா படப்பிடிப்பை கமல்ஹாசன் செவ்வாயன்று முடித்தார். விரைவில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனின் பகுதிகள் முடிவடைய உள்ளது.  அதன் பிறகு சிறிது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதற்கிடையில், உலகநாயகன் கமல்ஹாசன் அவரது நண்பர் மற்றும் இயக்குனருமான மணிரத்னத்துடன் இணையவுள்ளார்.  இந்த படத்திற்கு தற்காலிகமாக 'KH234' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ண உள்ளனர்.   ஏஆர் ரஹ்மான் இசையமைக்க KH234 படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கப்படும். 

மேலும் படிக்க: அடங்கேப்பா... ரிலீஸ்க்கு முன்பே வசூலை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2!

முன்னதாக, KH 234 படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூட்டப்பட்டது.  திரிஷா தற்போது பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.  பொன்னியின் செல்வன், லியோ என்று இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளது.  இந்த படத்தில் கமலுடன் த்ரிஷா நடித்தால் இருவரும் இணைந்து பணிபுரியும் மூன்றாவது படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் தற்போது, ​​நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  த்ரிஷா மாற்றப்படுகிறாரா அல்லது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இரு நடிகைகளும் நடிப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எல்லாம் சரியாக நடந்தால், உலகநாயகன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.  KH 234 படம் இந்த ஆண்டு துவங்கி 2024ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இந்தியன் 2 படத்தை முடிந்த பின்னர் உடனடியாக வினோத் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  காரணம், வினோத் குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடிப்பார் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் மகேஷ் நாராயணன் படமும் கிடப்பில் உள்ளது.  இது தவிர விக்ரம் 2 படமும் பேச்சு வார்த்தையில் உள்ளது.  லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தில் பிசியாக உள்ளார்.  அதன் பிறகு கைதி 2 படத்தை எடுக்க உள்ளார்.  இந்த 2 படங்களும் முடிந்த பின்னர் தான் விக்ரம் 2 படம் பற்றிய பேச்சு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ரஜினியின் கேரக்டர் சீக்ரெட்டை சொன்ன ஜெயிலர் பட நடிகர்... என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News