சமந்தவுடனான விவாகரத்து பற்றி முதன் முறையாக பேசிய நாக சைதன்யா!

பிரபல நட்சத்திர ஜோடிகளான நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் விவகாரத்திற்கு பின்னர் தாங்கள் எப்படி இருக்கிறோம் என்பது குறித்து பகிர்ந்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 23, 2022, 01:13 PM IST
  • நாக சைதன்யா-சமந்தா இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
  • கடந்த 2021ம் ஆண்டில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
  • விவாகரத்துக்கு பின்னர் ஒருவரையொருவர் குறை கூறாமல் அவர்களது பணிகளை செய்து வந்தனர்.
சமந்தவுடனான விவாகரத்து பற்றி முதன் முறையாக பேசிய நாக சைதன்யா! title=

நீண்ட நாள் காதலர்களாக இருந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா-சமந்தா ஜோடி கடந்த 2021ம் ஆண்டில் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்தனர்.  இந்த செய்திகள் சமூக ஊடகங்களில் தீயாக பரவி வந்தது, தங்களது பிரிவை இருவருமே தெரிவித்தனர்.  சமந்தா தைரியமாக சில சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் அவரது கணவரான நாக சைதன்யாவிற்கு விருப்பம் இல்லை என்று சில வதந்திகள் பரவியது.  மேலும் சில தகவல்களின்படி, சமந்தா இதுபோன்று திருமணத்திற்கு பிறகு நடிப்பது நாக சைதன்யாவிற்கு மட்டுமில்லை அவரது தந்தை நாகர்ஜூனாவிற்கும் பிடிக்கவில்லை அதுவே விவகாரத்திற்கு காரணம் என்று செய்திகள் வெளியானது. 

மேலும் படிக்க | தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் எப்படி இருக்கு? The Gray Man விமர்சனம்!

இருப்பினும் விவாகரத்துக்கு பின்னர் ஒருவரையொருவர் குறை கூறாமல் அவர்களது பணிகளில் கவனத்தை செலுத்தி வந்தனர்.  தற்போது நாக சைதன்யா 'தேங்க் யூ' படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார், இதுவரை அவர் பெரிதாக அவர்களது விவாகரத்து குறித்து பேசாமல் இருந்து வந்த நிலையில், தற்போது சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.  விவாகரத்து குறித்து அவர் கூறுகையில், விவாகரத்துக்கு பின்னான காலகட்டத்தில் நான் ஒரு மனிதனாக நிறைய மாறி இருக்கிறேன்.  ஆரம்பத்தில் என்னால் எதுவும் பேசமுடியவில்லை, ஆனால் இப்போது நான் தயாராக இருக்கிறேன்.  இப்போதெல்லாம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நான் உணர்வுபூர்மாக நெருக்கமாக இருக்கிறேன், புது மனிதனாக என்னை நான் பார்ப்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எண்ட்ட்று கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்ட சமந்தா, நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு எப்படி வாழ்க்கை இருக்கிறது என்று கூறிய செய்திகள் இணையத்தில் வட்டமடித்ததை தொடர்ந்து தற்போது நாக சைதன்யா பேசியதில் இணையத்தில் உலா வருகிறது.  நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சமந்தா, 'ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது, ஆனால் இப்போது நான் நன்றக இருக்கிறேன், இதற்கு முன்னர் இல்லாத வகையில் இப்போது நான் மிகவும் வலிமையாக இருக்கிறேன்' என்று கூறினார்.  மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் நாக சைதன்யாவை கணவர் என்று சொன்னதும், முன்னாள் கணவர் என்று சொல்லுங்கள் என்று கூறினார்.

மேலும் படிக்க | தேசிய விருது வென்ற பழங்குடி பெண்! யார் இந்த நஞ்சியம்மா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News