உண்மையை உடைத்த டிரைவர்..உச்சகட்ட டென்ஷனில் தாரா! மாரி தொடரில் நடக்கப்போவது என்ன..?

Maari Serial Episode Today: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. 

Written by - Yuvashree | Last Updated : Sep 25, 2023, 02:44 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர், மாரி.
  • தினம் தினம் புதுப்புது ட்விஸ்டுகளுடன் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
  • மாரி தொடரில் இன்று நடக்க இருப்பது என்ன?
உண்மையை உடைத்த டிரைவர்..உச்சகட்ட டென்ஷனில் தாரா! மாரி தொடரில் நடக்கப்போவது என்ன..?  title=

இந்த சீரியலில் கடந்த வாரம் சூர்யா டிரைவர் சிக்கி விட்டதாக தகவல் கிடைக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றிருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

டிரைவர் உண்மையை சொல்லிட்டா நம்முடைய திட்டம் எல்லாம் வெளியே தெரிந்து விடும் என்று தாரா உச்சகட்ட டென்ஷனில் இருக்க அங்கு வந்த மாரி என்ன பயமா இருக்கா? இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்லை. சூர்யா கிட்டையும் தேவி அம்மா கிட்டையும் மன்னிப்பு கேட்டீங்கன்னா உங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று சொல்ல தாரா எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் உன் வேலையை பாரு என்று பதிலடி கொடுக்கிறாள். 

Maari

சூர்யா ஸ்டேஷனுக்கு வர போலீஸ் டிரைவரை அடித்து கொண்டிருக்க அவன் தரகர் சண்முகம் சொல்லித்தான் இப்படி எல்லாம் செய்ததாக சொல்கிறான். வீட்டில் தாரா நமக்கும் டிரைவர்க்கும் நேரடி தொடர்பு கிடையாது. தரகர் சண்முகம் மூலமாதான் இதையெல்லாம் பண்ணோம், அவன் சண்முகத்தோட பேர சொல்லி விட்டால் சண்முகம் நம்மை மாட்டி விட வாய்ப்பிருக்கு என்று நினைத்து அவனுக்கு போன் போடுகிறாள். 

ஆனால் தரகர் சண்முகத்தின் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி கிடக்க அவன் தூங்கிக் கொண்டிருக்க சூர்யா தரகர் வீட்டு முகவரியை கேட்டு தெரிந்து கொண்டு போலீஸ் உடன் கிளம்பி வருகிறான். தாரா தொடர்ந்து போன் செய்ய முயற்சிக்க‌ கடைசியாக லைன் கிடைத்து விட அவனிடம் போலீஸ் தேடி வரும் விஷயத்தை சொல்கிறாள். 

மேலும் படிக்க | அடுத்தடுத்த திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க! இன்றைய எபிசோட் அப்டேட்!

இதை கேட்ட தரகர் சண்முகம் வீட்டை விட்டு வெளியே வரும்போது போலீஸ் அவனை சுற்றி வளைக்க அவர்களிடமிருந்து தப்பித்து எஸ்கேப்பாக பார்க்கும்போது கருப்பு உருவம் அவனை காப்பாற்றி கூட்டி செல்கிறது. இதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்த சூர்யா மாரியிடம் நடந்த விஷயங்களை சொல்லி நம்ப ரெண்டு பேரையும் பிரிக்க தான் யாரோ திட்டம் போட்டு  இப்படியெல்லாம் செய்றாங்க என்று சொல்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு செக் வைத்த சீதா.. மீரா கல்யாணத்தில் திடீர் திருப்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News