கார்த்திகை தீபம் அப்டேட்: நட்சத்திராவின் பிளானுக்கு பெரிய செக் வைத்த கார்த்திகை.. அபிராமி எடுக்கும் முடிவு என்ன?

Karthigai Deepam Update As on 13th September 2023: நட்சத்திராவின் பிளானுக்கு பெரிய செக் வைத்த கார்த்திகை.. அபிராமி எடுக்கும் முடிவு என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 13, 2023, 02:08 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • மாத்திரை கொடுத்து செயற்கையான முறையில் மூளைச்சாவு அடைய செய்யலாம் என பிளான்.
  • அபிராமி, கார்த்திக் ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்
கார்த்திகை தீபம் அப்டேட்: நட்சத்திராவின் பிளானுக்கு பெரிய செக் வைத்த கார்த்திகை.. அபிராமி எடுக்கும் முடிவு என்ன?  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மருத்துவமனையில் கண் விழித்த நட்சத்திரா மீண்டும் கார்த்தியின் வீட்டிற்குள் நுழைய ஐஸ்வர்யாவுடன் கூட்டு சேர்ந்து அபிராமியை வர வைத்து இன்னும் சில மணி நேரங்களில் நான் இறந்து விடுவேன் என்று சொல்லி டிராமா போட்டு அபிராமியின் மனசை மாற்ற அவள் கார்த்திக்கை கூட்டிட்டு நட்சத்திராவை வீட்டுக்கு அழைத்து போவதை பற்றி பேசினாள். 

இதனைத் தொடர்ந்து இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோடில் கார்த்திக்கும் ஹாஸ்பிடலுக்கு வந்து இறங்க நட்சத்திராவை பரிசோதனை செய்த டாக்டர் கொஞ்சம் கொஞ்சமா அவங்களுடைய உடல் உறுப்புகள் செயலிழந்து கொண்டே வருகிறது. அவங்களுடைய உடல் உறுப்புகளை தியானம் செய்தால் ஒரு நான்கு ஐந்து பேருக்கு வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்ல அபிராமி உயிரோடு இருக்கும்போது அது எப்படி சாத்தியம் என்று கேள்வி கேட்கிறாள். மாத்திரை கொடுத்து செயற்கையான முறையில் மூளைச்சாவு அடைய செய்யலாம் என்று சொல்ல பிறகு அபிராமி, கார்த்திக் ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவிக்க நட்சத்திராவும் ஐஸ்வர்யாவும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர்.

பிறகு நட்சத்திராவை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று ஆபரேஷனுக்கு ஏற்பாடுகள் நடக்க விட்டால் கொன்றுவிடுவார்கள் போல என பயந்து நான் வீட்டுக்குள்ள வருவதற்காக இப்படி பொய் சொல்லி நடிச்சேன் என்று உண்மையை ஒப்புக்கொண்டு என விட்டுடுங்க என்று அபிராமி காலில் விழ நட்சத்திராவின் பிளான் மொத்தமாக வெளியே வருகிறது. 

உடனே அபிராமி நீ எல்லாம் திருந்தவே மாட்ட, உன்னை நம்பி நான் இங்கு வந்தேன் பாரு என்று அவளை திட்டி விட்டு வெளியே செல்ல கார்த்திக் ஐஸ்வர்யாவிடம் வந்து என்ன அண்ணி இந்த பிளானும் ப்ளாப் ஆகிடுச்சா என்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதைத் தொடர்ந்து கார்த்திக் நட்சத்திரா எப்பவும் திருந்த மாட்டாள், ஆனால் தீபா அப்படி கிடையாது ரொம்ப நல்ல பொண்ணு அவ ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தானு எனக்கு தெரியல தயவு செஞ்சு அவளை ஏத்துக்கங்க என்று சொல்ல பதில் ஏதும் பேசாமல் அபிராமி அப்படியே நிற்கிறாள். 

மேலும் படிக்க | என்னை ஏற்றுக் கொள் என கெஞ்சும் கார்த்திக்! முடிவு என்னிடம் இல்லை யமுனா பதில்

பிறகு அபிராமி சரி நீ கிளம்பி போயிட்டு வா என்று சொல்லி கார்த்திக்கை அனுப்பி வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. 

மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News