திரையரங்கு தாண்டி தொலைக்காட்சியிலும் சாதனை படைத்த கர்ணன்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் தொலைக்காட்சியில் டிவிஆர் (TVR) ரேட்டிங்கில் 9.4 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2021, 04:28 PM IST
  • இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் 2018ம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்தது
  • கர்ணன் திரைப்படம் திரையரங்கில் வெளியான முதல் நாள் மட்டுமே திரையரங்கில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்
திரையரங்கு தாண்டி தொலைக்காட்சியிலும் சாதனை படைத்த கர்ணன்!  title=

இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் 2018ம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்தது.  அதன் பிறகு தனது இரண்டாவது படத்திலேயே தனுஷை வைத்து இயக்க போகிறார் என்ற செய்தி வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.  பின்பு மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணியில்  உருவாக்கும் கர்ணன் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.  இப்படத்தினை கலைப்புலி தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் இசையமைத்தார். 

ALSO READ D44 update: தனுஷின் D44 படத்தின் தலைப்பு அறிவிப்பு

கர்ணன் திரைப்படம் திரையரங்கில் வெளியான முதல் நாள் மட்டுமே திரையரங்கில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.   அடுத்த நாள் முதல் திரையரங்கில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடு காரணமாக அறிவித்திருந்தது.  இருப்பினும் கர்ணன் திரைப்படத்திற்கு மக்களின் ஆதரவு வெகுவாக காணப்பட்டது, திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தனர்.  கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தில் வருவதற்கு முன்பு கடைசியாக திரையரங்கில் வெளியான படம் கர்ணன் ஆகும். 

திரையரங்கில் வசூல் சாதனை படைத்த கர்ணன் தற்போது தொலைக்காட்சியிலும் சாதனை படைத்துள்ளது.  கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இத்திரைப்படம் முதன்முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.  அதில் டிவிஆர் ரேட்டிங்கில் 9.4 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளது கர்ணன் திரைப்படம்.  இதனை படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். 

 

தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருந்து வருகிறார் மாரிசெல்வராஜ். அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும் மற்றும் உதயநிதி ஸ்டாலினிடம் கதைசொல்லி ஓகே சொல்லி இருப்பதாகும் செய்திகள் வெளியாகிறது.  இவற்றில் எந்த படத்தை அடுத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கர்ணனின் வெற்றி விழாவில் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தனுஷ் தெரிவித்திருந்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYe

Trending News